Kathir News
Begin typing your search above and press return to search.

அட லேட்டஸ்டா மக்களிடம் சிக்கினது கனிமொழியா? கன்னியாகுமரி மக்கள் செய்த சிறப்பான சம்பவம்...

அட லேட்டஸ்டா மக்களிடம் சிக்கினது கனிமொழியா? கன்னியாகுமரி மக்கள் செய்த சிறப்பான சம்பவம்...

Mohan RajBy : Mohan Raj

  |  22 Nov 2023 6:50 AM GMT

வசமா சிக்கிட்டாங்களாமே கனிமொழி? கன்னியாகுமரி மக்கள் செய்த சம்பவம்....

கடந்த சில மாதங்களாக திமுக கூட்டணி எம்பிகள் மக்கள் மத்தியில் செல்லும் பொழுது அவர்களை மக்கள் நிறுத்தி கேள்வி கேட்பது தொகுதிக்கு என்ன செய்தீர்கள்? எங்கே சென்றீர்கள் இவ்வளவு நாளா ஏன் வரவில்லை? ஓட்டு வாங்கிய போது பார்த்தது, அதற்குப் பிறகு உங்களை பார்க்க முடியவில்லை! என்கின்ற கேள்வியை தொடர்ச்சியாக எழுப்பி வருகின்றனர்.

திருச்சியில் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டு இதுபோல் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது, அதனை தொடர்ந்து சிதம்பரம் எம்.பி திருமாவளவனிடம் கடந்த 10 தினங்கள் முன்பு செய்தியாளர்கள் ஓட்டு போட்டு! அதற்குப் பிறகு நீங்கள் சென்னையிலேயே இருந்து விட்டீர்கள் உங்களுக்கென இங்கு அலுவலகம் கூட கிடையாது, சிதம்பரம் தொகுதிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? என கேள்வி எழுப்பிய போது அந்த செய்தியாளர்களிடம் திருமாவளவனின் விடுதலை சிறுத்தை கட்சி ஆட்கள் வாக்குவாதம் செய்ததும், பின்னர் திருமாவளவன் விஷயம் விபரீதமாவதை புரிந்து கட்சியினரையும், பத்திரிகையாளரையும் சமாதானப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி காங்கிரஸ், விடுதலை சிறுத்தை என திமுக கூட்டணி கட்சியின் எம்பிக்கள் மக்களால் கேள்வி கேட்ட துரத்தப்படும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மக்களால் விரட்டப்பட்டார். கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற கரூர் எம்பி ஜோதி மணியை ஓட்டு கேட்டு வரும் பொழுது உங்களை பார்த்தது அதன் பிறகு பார்க்க முடியவில்லை என மக்கள் கேள்வி எழுப்ப அங்கிருந்து ஜோதிமணி ஓடியதும், பின்னர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப செய்தியாளர்களிடம் கோபித்துக் கொண்டு எம்.பி ஜோதிமணி ஓடியதும் சம்பவமானது.

இப்படி தொடர்ச்சியாக திமுக கூட்டணி எம்பிக்கள் மக்களால் கேள்வி கேட்டு என்ன செய்தீர்கள்? பதில் கூறுங்கள் என மறைக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது திமுகவில் இருக்கக்கூடிய முக்கிய தலைவரான எம்பி கனிமொழிக்கு இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் கோடிமுனை மீனவர் கிராமத்தில் உலகம் மீனவ தின விழா நேற்று நடைபெற்றது, இதில் திமுக எம்பி கனிமொழி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், ராஜேந்திர குமார், எம் பி விஜய் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இந்த விழாவில் கனிமொழி பேசினார்.

கனிமொழி பேசுகையில் 'மீனவரின் துயரங்களை ஏற்றுக் கொள்ளாமல், கொண்டாடப்பட வேண்டியவர்களை கொண்டாடாமல் மதிக்க வேண்டிய மீனவர்களுக்கு உரிய மரியாதை தராமல் பாகுபாடு காட்டி ஒதுக்கி வைத்திருக்கும் சூழலை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்' எனக்கூறி பேசிக் கொண்டிருந்தார்.

மேலும் கனிமொழி பேசும் பொழுது 'உங்கள் கோரிக்கைகளை நிச்சயமாக நாம் முதல்வர் நிறைவேற்றித் தருவார். ஏனென்றால் மீனவர்களுக்கு என தனியாக மாநாடு நடத்தியவர் நமது முதலமைச்சர், அந்த மாநாட்டில் நீண்ட காலமாக இருக்கக்கூடிய பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தந்ததும் நம்முடைய திராவிடம்! ஆனால் கடந்த 10 வருஷமாக மீனவர்களுக்கு வீடு கட்டினால் பட்டா வழங்கப்படவில்லை, நமது முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு நீங்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இப்பொழுது தொடர்ந்து பட்டாக்கள் வழங்கப்படுகின்றன' என பேசிக்கொண்டு இருந்தார்.

அப்படி கனிமொழி பேசிக் கொண்டிருந்த சமயத்தில் கூட்டத்தில் இருந்து எழுந்த சில பெண்கள் 'கோடிமுனையைச் சேர்ந்த எங்களுக்கு பட்டா கிடைக்கவில்லை' என சத்தம் போட்டனர். உடனே கனிமொழி அதிர்ந்தார், என்னடா இது இதுவரை நான் பேசினால் கேட்டுக் கொண்டிருப்பார்கள் இப்போது எதிர்த்து பேசுகிறார்கள்? என ஒரு வாரியாக சுதாரித்துக் கொண்டு மீண்டும் கனிமொழி மைக்கில் 'உங்களுக்கு பட்டா வரவில்லையா? ஒரு மனு கொடுங்க நான் நிச்சயமா பட்டா வாங்கி தருவதற்கு ஏற்பாடு செய்கிறேன்' எனக் கூறியுள்ளார்.

அதற்கு அந்த பெண்கள் 15 வருஷமா பட்டா வரல எனக் கூற உடனே கனிமொழி கடுப்பாகி அதை நீங்கள் 10 வருஷத்துக்கு முன்னாடி இருந்தவங்களை கேட்டு இருக்கணும் என கூறினார். ஆனாலும் அந்த பெண்கள் விடுவதாக இல்லை, பட்டா வேண்டும் என தொடர்ச்சியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேறு வழியில்லாமல் கனிமொழி கோரிக்கையை மனுவாக கொடுங்கள் நான் ஏற்பாடு செய்கிறேன் என அங்கிருந்து பேசிவிட்டு விறுவிறுவென கிளம்பிவிட்டார்.

இப்படி திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், முதல்வர் ஸ்டாலினின் தங்கையும், எம்பியுமான கனிமொழியை பொது இடத்தில் மேடையிலேயே வைத்து கேள்வி எழுப்ப அவர் அங்கிருந்து கோபப்பட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்றிபடுத்தியுள்ளது. இன்னும் ஐந்து மாத காலத்தில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் திமுக கூட்டணியின் எம்பிக்கள் இப்படி மக்களால் துரத்தப்படுவது திமுகவின் தேர்தல் முடிவுகளை இப்பொழுதே கூறுகிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News