அதானி குழுமம்: இஸ்ரேலின் உளவுத்துறை நிறுவனமான மொசாட் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களுக்கென ஒரு ரகசிய உளவுத்துறையை வைத்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை Research and Analysis Wing அமைப்பு இந்தியாவின் சிறந்த உளவுத்துறையாக உள்ளது. இந்த உளவுத்துறைகளின் வேலை இந்தியாவை பாதுகாப்பதும், இந்தியாவிற்கு எதிரான சதிகளை முறியடிப்பதும் ஆகும். இந்நிலையில் இஸ்ரேலின் உளவுத்துறை நிறுவனமான மொசாட் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு தான் இந்தியாவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதானி குழுமத்திற்கு எதிராக யார் செயல்பட்டு வருகிறார்கள்? அவர்களுடைய பின்னணி என்ன? என்பதையும் இவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள்.
2023ம் ஆண்டில் அதானி குழுமத்திற்கு எதிரான அதன் அறிக்கையில் அந்நிறுவனம் பல பில்லியன் டாலர் இழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஹிண்டன்பர்க். இந்த நிறுவனம் உலக அளவில் செயல்படும் பெரிய நிறுவனங்களில் நடக்கும் நிதி மோசடிகள் மற்றும் குற்றப் பின்னணிகளை அம்பலப்படுத்தும் ஒரு ஆராய்ச்சி நிறுவனமாக செயல்பட்டு வந்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டில் அதானி நிறுவனத்திற்கு எதிராக தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த ஒரு நிகழ்விற்கு பிறகு ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் இனி செயல்படாது, அது நிரந்தரமாக மூடப்படுவதாக அதன் செயல் தலைவர் அறிவித்தார்.

ஆனால் கடந்த ஆண்டு இந்த நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கை மூலமாக அதானி நிறுவனத்தின் பங்குகள் முற்றிலுமாக சரிந்தன. பெரும் பங்குச்சந்தை இழப்பிற்கும் இது காரணமானது. இந்த நிலையில் அதானி குழுமம் தன்னுடைய எதிரிகளை அடையாளம் கண்டு கொள்வதற்காக இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனமான மொசாட்டிடம் உதவியை நாடி இருக்கிறார்கள். அதானி குழுமம் தனது எதிரிகளை எதிர்கொள்ள உதவுவதில் இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனமான மொசாட் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியூட்டும் வகையில் ஸ்புட்னிக் இந்தியாவுக்கு தெரியவந்துள்ளது.

ஸ்புட்னிக் இந்தியாவின் பிரத்யேக அறிக்கை, அதானி குழுமத்தின் உலகளாவிய செயல்பாடுகள் மற்றும் வெளிநாட்டு உளவுத்துறை நிறுவனங்களின் ஈடுபாடு குறித்து புதிய வெளிச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. மொசாட்டின் ஈடுபாடு குறித்த விவரங்கள் தீவிர ஆர்வத்தையும் ஆய்வையும் காட்டி உள்ளது. வணிகம் மற்றும் அரசியலின் சூழ்ச்சி குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. மேலும் பல தகவல்கள் வெளிச்சத்திற்கு வரும்போது, இதில் கூறப்படும் கூட்டாண்மையின் தாக்கங்களை தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இருவரும் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். இந்த செயல்களின் பின்னணியில் இந்தியாவின் மிகப்பெரிய எதிர்க்கட்சியின் முக்கிய புள்ளிகள் இருப்பதாகவும் இடம் பெற்று இருக்கிறது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமத்தின் பதில் என்னவாக இருக்கும்? என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். ஆனால் அதானி குழுமத்தின் வளர்ச்சி, நிறுவனத்தின் நற்பெயர் மற்றும் எதிர்கால செயல்பாடுகளில் இது குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.