Kathir News
Begin typing your search above and press return to search.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இந்தியா எடுத்த மிகப்பெரிய முடிவு, கதறும் பாகிஸ்தான்!

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இந்தியா எடுத்த மிகப்பெரிய முடிவு, கதறும் பாகிஸ்தான்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 April 2025 10:14 PM IST

இந்தியா பதிலடி:

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதல், இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய அரசு தயாராகி வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தானுடன் இந்தியாவின் நீண்டகால நீர் ஒப்பந்தமான 'சிந்து நீர் ஒப்பந்தம்' தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று மத்திய அமைச்சரவை பாதுகாப்பு குழு நேற்று அறிவித்துள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பு வரலாற்றில் மிக முக்கியமான ஒரு முடிவாக பார்க்கப்படுகிறது.


ஏனெனில் கலந்த காலங்களாக இந்த ஒரு முடிவை இந்தியா எடுத்தது கிடையாது ஏனெனில் உலக வங்கி முன்னுலகில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் செய்து கொண்ட மிகப் பரிய ஒப்பந்தமாக இது பார்க்கப்படுகிறது இந்நிலையில் இதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பான முடிவு பாகிஸ்தான் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


பாகிஸ்தான் அச்சம்:

இந்த ஒப்பந்தம் 1960ம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது. உலக வங்கியின் நடுவராக இருந்து இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இது இரு நாடுகளுக்கும் இடையே நீர் விநியோகத்தை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியா நதிநீர் உற்பத்தியில் சுமார் 30% மட்டுமே பயன்படுத்தலாம், மீதமுள்ள 70% பாகிஸ்தானுக்கே அனுப்பப்படுகிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும் இடையே 1965, 1971 மற்றும் 1999 ஆகிய மூன்று போர்கள் நடந்த போதும் கூட, இந்த ஒப்பந்தம் எந்த நேரத்திலும் நிறுத்தப்படவில்லை. ஆனால், தற்போது நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் தொடர்புடையவை என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனையடுத்து இந்தியா கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு, நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News