Kathir News
Begin typing your search above and press return to search.

கொரானா பரவும் வேளையில் பார்ட்டியா? சர்ச்சையில் சிக்கும் பஞ்சாப் காங்கிரஸ்!

கொரானா பரவும் வேளையில் பார்ட்டியா? சர்ச்சையில் சிக்கும் பஞ்சாப் காங்கிரஸ்!

Saffron MomBy : Saffron Mom

  |  27 April 2021 1:00 AM GMT

கொரானா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் வேளையிலும், பஞ்சாபில் உள்ள பதிண்டா மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பார்ட்டி கொண்டாடியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

tribune india வெளியிட்டுள்ள தகவலின் படி, பதிண்டா முனிசிபல் மேயர் ரமனின் கணவர் சந்தீப் கோயல் என்பவர் இந்த விருந்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இவர் ஒரு சாராய காண்ட்ராக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மனைவி மேயர் பதவி ஏற்றதற்கு இந்த விருந்து வைக்கப்பட்டதாக தெரிகிறது.

சமூக வலைத்தளங்களில் வலம் வரும் புகைப்படங்களில் இருந்து மூத்த டெபுடி மேயர் அசோக் பிரதான், காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் மேயருடன் விருந்தில் கலந்து கொண்டது தெரிகிறது.


இது சர்ச்சையானவுடன் இது குறித்து கருத்து தெரிவித்த அசோக் பிரதான் அது ஒரு சாதாரண சந்திப்பு என்றும், கொரநா விதிமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும் தான் சிறிது நேரமே அங்கிருந்ததாகவும் தெரிவித்தார். இந்த விருந்தை நடத்தியதாக கூறப்படும் சந்தீப் கோயல் அதை மறுத்துள்ளார். தன்னுடைய மனைவி கூட அந்த இடத்தில் இல்லை எனவும் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News