Kathir News
Begin typing your search above and press return to search.

'இந்தோ-பசுபிக்' கருத்தியல் மற்றும் 'QUAD' - சீனாவைக் கட்டுப்படுத்தும் யுக்திகள்!

இந்தோ-பசுபிக் கருத்தியல் மற்றும் QUAD - சீனாவைக் கட்டுப்படுத்தும் யுக்திகள்!

Saffron MomBy : Saffron Mom

  |  6 April 2021 9:55 AM GMT

இந்தோ-பசுபிக் என்பது என்ன பகுதி என்பதில் அவ்வளவாக ஒருமித்த கருத்து இல்லை என்றாலும் இது ஆசியா-பசிபிக் மற்றும் இந்தியாவை உள்ளடக்கிய பிராந்தியமாக பரவலாக பார்க்கப்படுகிறது.

இந்தோ- பசுபிக் என்பது இந்திய மற்றும் பசுபிக் பெருங்கடல்களை உள்ளடக்கியது. மேலும் இந்தப் பகுதி நாடுகளின் சர்வதேச கட்டமைப்பிற்கான ஒரு கருத்தியல் சொல்லாகவும் உள்ளது.

2007 ஆம் ஆண்டில் ஜப்பான், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் அமைப்பு 'QUAD' என்று ஆரம்பிக்கப்பட்டது. இது அந்நாடுகள் பகிர்ந்து கொள்ளும் ஜனநாயகம், சட்டத்தின் மதிப்புகள், நாடுகளின் நிலைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுஅனைத்து நாடுகளின் ஒத்துழைப்பை மையமாகக் கொண்டது.

இந்தோ-பசிபிக் பகுதியில் அவர்களின் கடல்சார் பகுதிகள் பொதுவானவை. இது ஆசிய பசிபிக் பகுதியில் அதிகாரச் சமநிலையை பராமரிக்க செயல்படுகிறது. அந்த நேரத்தில் ஒபாமாவின் நிர்வாகம் 'ஆசியா-பசிபிக்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இது குறித்த நிலைப்பாட்டை எடுக்கும் பொழுது 'இந்தோ பசுபிக்' என்ற வார்த்தையை பயன்படுத்த தொடங்கினார்.

இந்த வார்த்தை பிரயோகமும் யோசனையும் ஐரோப்பிய ஒன்றியத்தால் உறுதியாக ஆதரிக்கப்படுகிறது. ஆனால் இது எதிர்காலத்தில் முறையாக நிறுவனமயமாக்கப்படுமா என்ற சந்தேகம் உள்ளது. திறந்த மற்றும் சுதந்திரமான இந்தோ-பசுபிக் என்ற கருத்து உலகம் முழுவதும் பரவலாக உள்ளது. எந்த ஒரு வற்புறுத்தலும் இல்லாமல் நாடுகள் செயல்படலாம் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீடு எளிமையான வழிகளில் ஈடுபட முடியும் என்பதே இதன் பொருள்.

இந்த கருத்தை பயன்படுத்திய முதல் நாடு ஜப்பான். ஜப்பான் பிரதமர், புதிய இணைப்பு தாழ்வாரங்களை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துவதில் ஜப்பான் கவனம் செலுத்தி செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இதே கருத்தை ஏற்றுக்கொண்டார். இந்தக் கருத்தின் முதன்மை கவனம் கடல்களை மையமாகக் கொண்டது. மேலும் இந்திய பெருங்கடலில் இந்தியா ஒரு முக்கியமான மூலோபாய நிலையை வகிக்கிறது.

இந்தியாவிற்கும் அதன் வர்த்தக கூட்டாளிகளுக்கும் இடையிலான கடல்சார் பிணைப்பு இந்தோ பசுபிக் இணைப்பிற்கு இன்றியமையாதது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியில் யூரேசியா மற்றும் ஆப்பிரிக்காவில் சீன செல்வாக்கு விரிவடைந்து வருகிறது. இதை எதிர் சமநிலைப்படுத்த இந்த இந்தோ- பசுபிக் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த பெல்ட் அண்ட் ரோடு முயற்சி மூலம் சீனா, ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள ஜிபூட்டி பாகிஸ்தானில் குவாடர், இலங்கையின் ஹம்பாந்தோட்டா அதேபோல் மாலத்தீவு மற்றும் டான்சானியா ஆகிய துறைமுகங்களிலும் தனது இருப்பை பலப்படுத்தி உள்ளது. ஜப்பான் நீண்டகாலமாக சீனாவின் வளர்ச்சியை கவனித்தது .ஆனால் சீனா அதிகப்படியான விநியோகத்தையும் திறனையும் உருவாக்கும் என ஜப்பான் நினைக்கவில்லை. சீனாவின் முழு திறனையும் நிர்வகிக்கும் ஒருவழியாக பெல்ட் அண்ட் ரோட் முயற்சி தொடங்கியது.

இது பொருளாதார திட்டமாகவும் சீனாவின் மென்மையான சக்திக்கு ஒரு முன் முயற்சியாகவும் தொடங்கியது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்திய இந்தோ-பசுபிக் என்ற கருத்து, வளர்ந்து வரும் மற்றொரு பனிப்போரில் சீனாவை தடுப்பதற்காக இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியோரின் இணைப்பாகும்.

பல சீன அறிஞர்கள் இந்த இந்தோ பசுபிக் கருத்து சீனாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கு எதிராக இருப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளதாக நம்புகிறார்கள். அமெரிக்காவில் இந்தோ-பசுபிக் மூலோபாயத்தின் நோக்கம் சீனாவின் எழுச்சியை தடுப்பது, இராஜதந்திர மற்றும் இராணுவ ஆதரவு மூலம் இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தி சீனாவின் செல்வாக்கை குறைப்பதற்கும் ஆகும்.

மேலும் சீனாவின் விரிவடைந்து வரும் இராணுவ மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை சமநிலை படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தோ-பசுபிக் என்பது சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் வளர்ச்சியின் பிரதிபலிப்பாகும்.

வளர்ந்து வரும் சக்திகளின் போட்டிகளின் இது பிரதிபலிக்கிறது சீனா இந்த பகுதியை சுதந்திரமாகவும் நிலையாகும் வளமுடனும் வைத்திருப்பது சீனாவுக்கு தான் நல்லது. இந்தோ பசுபிக் ஒழுங்கை நிர்வகிக்க நிறைய நடவடிக்கைகள் தேவைப்படும். தீவிரவாதம், பருவநிலை, மற்றும் பல பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் கவனமாக கையாளப்பட வேண்டும். அமைதியான பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும்.

திறந்த சுதந்திரமான நிலையான இந்தோ-பசுபிக் என்ற முயற்சியின் கீழ் தான். அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒருங்கிணைப்பை பலப்படுத்தி கொள்கைகளும் மூலோபாயத்தையும் தெளிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Reference : ஓபி

Cover Image Courtesy: The New Indian Express

Next Story
கதிர் தொகுப்பு
Trending News