Kathir News
Begin typing your search above and press return to search.

மோடிஜி என ஆர்வமாக அழைத்த மாணவர்கள் - கண்ணிமைக்கும் நேரத்தில் பிளாஸ்டிக் சேரில் ஏறி மாணவர்களுக்கு கையசைத்த பிரதமர்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி,

மோடிஜி என ஆர்வமாக அழைத்த மாணவர்கள் - கண்ணிமைக்கும் நேரத்தில் பிளாஸ்டிக் சேரில் ஏறி மாணவர்களுக்கு கையசைத்த பிரதமர்

Mohan RajBy : Mohan Raj

  |  30 July 2022 8:44 AM GMT

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இடநெருக்கடி காரணமாக மற்றொரு அரங்கில் இருந்த மாணவர்களை நேரில் பார்த்து வாழ்த்து தெரிவிப்பதற்காக அங்கு சென்றார். அப்போது அரங்கில் இருந்த மாணவர்களுக்கு மோடியின் உருவம் தெரியவில்லை. இதனால் பின்னால் இருந்த மாணவர்கள் மோடிஜி என குரல் எழுப்பினர். உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் நாற்காலி ஒன்றை எடுத்து வருமாறு மோடி அறிவுறுத்தினார்.

இதையடுத்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அருகில் கிடந்த பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து வந்தார்.அதேவேளையில் மற்றொரு பாதுகாப்பு அதிகாரியை சற்று உயரமான மரத்தினாலான நாற்காலியை தூக்கி வந்தார் அதற்குள் சட்டம் மோடி பிளாஸ்டிக் நாற்காலியில் ஏறி பின்னால் நின்று கொண்டு தனது இரு கைகளையும் உயர்த்தி மாணவர்களைப் பார்த்து கையசைத்தார் அப்போது பின்னால் வந்த மாணவர்கள் மோடியை பார்த்து மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

இதன்பின்பு மோடி நாற்காலியில் இருந்து பத்திரமாக கீழே இறங்கினார். எந்தவித பாதுகாப்பும் இல்லாத பிளாஸ்டிக் நாற்காலியில் மோடி திடீரென ஏறியது பாதுகாப்பு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

அதே நேரத்தில் மோடியை நாற்காலியில் சரிந்து விழாதபடி பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்துக்கொண்டு சாதுர்யமாக செயல்பட்டனர்.


Source - Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News