விண்ணை முட்டிய கட்டுமான பொருள்கள் விலை - முடங்கிய பணிகள், தவிப்பில் மக்கள்! அரசு கண்டுகொள்ளுமா?
கட்டுமான பொருட்கள் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவு நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
![விண்ணை முட்டிய கட்டுமான பொருள்கள் விலை - முடங்கிய பணிகள், தவிப்பில் மக்கள்! அரசு கண்டுகொள்ளுமா? விண்ணை முட்டிய கட்டுமான பொருள்கள் விலை - முடங்கிய பணிகள், தவிப்பில் மக்கள்! அரசு கண்டுகொள்ளுமா?](https://kathir.news/h-upload/2022/06/15/1372030-whatsapp-image-2022-06-15-at-61744-am.webp)
கட்டுமான பொருட்கள் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவு நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வீடு கட்டும் கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டாக உயர்ந்து வருவது வீடு கட்டுபவர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதமாக விலை ஏற்றம் காரணமாக துவக்கப்பட்ட பணிகள் பாதியில் நிற்கின்றன
இந்நிலையில் கட்டுமானப் பொருட்களான செங்கல், கம்பி, சிமென்ட், ஜல்லி, மணல், எம்.சாண்ட், மின்சாதனப் பொருள்கள், டைல்ஸ், பிளம்மிங் பொருள்கள் கடந்த ஓராண்டாக விலை 50 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.
சராசரியாக 40 ஆயிரம் ரூபாய் விற்கப்பட்ட ஒரு டன் கம்பி தற்போது 80 ஆயிரம் முதல் 82 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது கடந்த ஒரு ஆண்டில் இதனுடைய உயர்வு 100 சதவிகிதம் அதிகரித்துள்ளது, இதேபோன்று சிமெண்ட் பொருள்களின் விலையும் மணல் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது இதன் காரணமாக வீடு காட்டும் நடுத்தர வர்க்கத்தினர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
முன்பு ஒரு சதுர அடி கட்டுமானத்திற்கு சராசரியாக 1,500 முதல் 1,800 வரை செலவாகி கொண்டு இருந்தது. தற்போது ஒரு சதுர அடி கட்டுமானத்திற்கு 2,400 முதல் 2,800 வரை செலவாகிறது என பொறியாளர்களும் வீட்டில் உரிமையாளர்களும் புலம்பித் தவித்து வருகின்றனர்.
ஏற்கனவே பழைய விலையில் ஒப்பந்தம் செய்தவர்கள் வீடு கட்டும் தொழிலை துவங்கியவர்கள் தற்போது தொழிலை முடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு இதில் நடவடிக்கை எடுக்க தயங்குகிறது எனவும், அரசு இது தொடர்பாக எந்த ஒரு அமைப்புகளிடம் கருத்தையோ அல்லது எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனவும் மக்கள் புலம்பி வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக புதிதாக கட்டுமானங்கள் துவங்குவது 50 சதவிகிதம் முதல் 80 சதவீதம் வரை குறைந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.