Kathir News
Begin typing your search above and press return to search.

கத்தோலிக்க சர்ச் நடத்திய பள்ளிகளில் பூர்வகுடி குழந்தைகள் படுகொலை - மன்னிப்பு கேட்பாரா போப்?

கத்தோலிக்க சர்ச் நடத்திய பள்ளிகளில் பூர்வகுடி குழந்தைகள் படுகொலை - மன்னிப்பு கேட்பாரா போப்?

Saffron MomBy : Saffron Mom

  |  2 July 2021 9:30 AM GMT

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, வாடிகனில் வசிக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிசை மன்னிப்புக் கோரும் படி கேட்டிருந்தார். கனடாவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூர்வகுடி குழந்தைகளின் இரண்டு பெரிய இடுகாடுகள் (mass graves) ஜூன் 2021ல் கண்டறியப்பட்டது. இந்த படுகொலைகளில் கத்தோலிக்க தேவாலயத்தின் பங்களிப்பிற்காக மன்னிப்பு கோரும் படி ட்ரூடோ கேட்டுக் கொண்டுள்ளார்.

கனடாவில், ஜூன் மாத ஆரம்பத்தில் மரிபெல் ரெசிடென்சியல் ஸ்கூல் எனும் பகுதியில் 751 சடல எச்சங்கள் (mortal remains) கொண்ட அடையாளமிடப்படாத இடுகாடு கண்டறியப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு, பிரிட்டிஷ் கொலம்பியாவில் 215 எச்சங்கள் கொண்ட இடுகாடு இதற்கு முன்னால் தங்கும் பள்ளியாக இருந்த இடத்தில் கண்டறியப்பட்டது.

இந்த இரண்டு பள்ளிகளும் கனடிய பூர்வகுடி (indigenous) குழந்தைகளை அவர்கள் குடும்பத்திடமிருந்து பிரித்துப் படிக்க வைக்கும் தங்கும் பள்ளிகள் ஆகும். கிட்டத்தட்ட 113 வருடங்கள் இத்தகைய பள்ளிகள் இயங்கின. தங்களுடைய சொந்த மொழியை கூட இந்த பள்ளிகளில் பேசுவதற்கு அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய மிகப்பெரும் இடுகாடுகள் (mass graves) பூர்வகுடி சமூகத்தின் உறுப்பினர்களால் தரையை ஊடுருவும் ரேடாரால் கண்டறியப்பட்டது. இத்தகைய சடல எச்சங்களைக் கண்டறியும் இந்த பணி சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் தொடங்கப்பட்டது.

கத்தோலிக்க சர்ச்களால் இத்தகைய தங்கும் பள்ளிகள் 1890-ல் தொடங்கி 1970-கள் வரை இயங்கியது. இது ஒரு காலத்தில் கனடாவின் மிகப்பெரிய பள்ளியாக 500 மாணவர்கள் வரை கொண்டிருந்தது. 215 சடல எச்சங்களில், 3 வயது குழந்தையின் சடல எச்சமும் இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


அனைத்து குழந்தைகளும் பல ஆண்டுகளுக்கு முன்னால் புதைக்கப்பட்டனர். இன்னும் ரேடார் மூலம் கண்டறியும் பணி தொடர்ந்தால் மேலும் சடலங்களின் எச்சங்கள் கண்டறியப்படும் என்று பூர்வகுடி சமூகத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

இதன் பின்னணி என்ன?

கத்தோலிக்க சர்ச் இப்படி தங்கும் பள்ளிகளை 1831 முதல் 1996 வரை கனடாவில் நடத்தினர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் பூர்வ குடி மக்களின் பல நிலங்களை கனடா அரசாங்கம் அபகரித்தது . குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியாவில்.

1883 வாக்கில் கனடா அரசாங்கம் பூர்வகுடி குழந்தைகளை இத்தகைய தங்கும் பள்ளிகளில் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். அவர்களுடைய பூர்வகுடி சமூகத்திலிருந்து இவை மிகவும் தொலைவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. சர்ச்சுகளால் நடத்தப்பட்ட இந்த பள்ளிகள் அங்கே பூர்வகுடி மக்களின் சொந்த மொழி, கலாச்சார நடவடிக்கைகளை தடை செய்தது. இது பல நேரங்களில் வன்முறையின் மூலம் அமல்படுத்தப்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் பூர்வகுடி குழந்தைகளை அவர்களின் குடும்பங்களில் இருந்து பிரித்து, கட்டாயப்படுத்தி இத்தகைய கிறிஸ்தவ தங்கும் பள்ளிகளுக்கு அழைத்து வந்தனர். இத்தகைய பூர்வகுடி குழந்தைகளை மேலைநாட்டு கலாச்சாரத்துடன் ஒன்றிணைப்பதே இதன் நோக்கம் என்று கூறப்பட்டது.

பதிவுகளின் படி பலவிதமான வியாதிகள், பாலியல் ரீதியாக, உடல் ரீதியாக, மன ரீதியாக கடும் துன்புறுத்தல்களுக்கு இக்குழந்தைகள் ஆளானார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. கனடா அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு ஆணையம் ஆறு வருடங்களாக 6750 சாட்சிகளைக் கொண்டு இத்தகைய பள்ளிகளின் வரலாறு குறித்து விசாரணை நடத்தினர்.

2015-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த பள்ளிகளின் அமைப்பு 'கலாச்சார இனப்படுகொலை' (Cultural Genocide) என்று அழைக்கப்பட்டது. இதில் படித்த முன்னாள் மாணவர்கள் இந்த ஆணையத்திடம் கூறுகையில், பல சமயங்களில் இத்தகைய பள்ளிகளில் இருந்த பாதிரியார்கள், பூர்வகுடி மாணவிகளுடன் குழந்தைகள் பெற்றுக் கொண்டதாகவும் அந்த குழந்தைகள் பெரும்பாலும் இளம் தாயாரிடம் இருந்து பிரிக்கப்பட்டு, கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர். பல மாணவர்கள் நோய், விபத்து, தீ மற்றும் தப்பிக்கும் போது ஏற்பட்ட காயங்களினால் இறந்ததாக இந்த ஆணையம் தெரிவிக்கின்றது.

வாடிகன் போப் பிரான்சிஸ் இப்படி சர்ச்சினால் நடத்தப்பட்ட பள்ளிகளில் நடந்த படுகொலைகளுக்கு எந்த மன்னிப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் இப்படி பூர்வகுடி குழந்தைகளின் இடுகாடுகளும் எச்சங்களும் கண்டறிவது தனக்கு 'வேதனை' அளித்துள்ளதாக மட்டுமே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பள்ளிகளில் படித்த மாணவர்களை போப் சந்திக்கவிருப்பதாக சமீபத்திய செய்திகள் வெளியாகியுள்ளது.

With Inputs From: Genocide of Indigenous Children in Canada: Catholic Church run residential schools guilty of burying thousands of Indigenous Children

Next Story
கதிர் தொகுப்பு
Trending News