Kathir News
Begin typing your search above and press return to search.

முருகனின் ஆறுபடை வீடுகள் உணர்த்தும் உண்மைகள்!

முருகனின் ஆறுபடை வீடுகளும் மனிதனின் ஆதாரங்களாக எவையெல்லாம் இருக்கிறதோ அவற்றை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.

முருகனின் ஆறுபடை வீடுகள் உணர்த்தும் உண்மைகள்!

KarthigaBy : Karthiga

  |  8 Sep 2023 6:45 AM GMT

நமக்கு வீடு இருப்பது போல முருகனுக்கு படை வீடுகள் இருக்கின்றன. அவற்றை ஆறுபடை வீடு என்று வருணிப்பது வழக்கம் .அந்த ஆறுபடை வீடுகளும் ஆறு விதமான ஆதாரங்களை நமக்கு வழங்கும் என்பது நம்பிக்கை. வாழ்க்கை வளம் பெற பொருளாதாரமும் நமக்கு தேவை .அருணகிரிநாதர் பெருமான் முருகப்பெருமானை நோக்கி பாடும் பொழுது 'அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியாள் இடைஞ்சல் கலைவானேய' என்று குறிப்பிடுவார் .


ஒரு மனிதன் பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆறு விதமான ஆதாரங்கள் தேவை. அவை ஆரோக்கியம் , நல்ல உறவு, பொருளாதாரம், அபயம் எனப்படும் பாதுகாப்பு ஆற்றல் ,ஆளுமை திறன், நிறைவான ஞானம். இந்த ஆறு ஆதாரங்களையும் முறையாக பெறுவதற்கு சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருச்செந்தூர் , திருத்தணி, பழனி ஆகிய ஆறுபடை வ வீடுகளுக்கும் ஜென்ம நட்சத்திரம் அன்று அல்லது செவ்வாய்க்கிழமை அன்று சென்று வழிபட்டு வந்தால் நலம் பெறலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News