Kathir News
Begin typing your search above and press return to search.

சுந்தரருக்கு ஊன்றுகோல் வழங்கிய பூண்டி ஊன்றீஸ்வரர்!

சுந்தரருக்கு ஊன்றுகோல் வழங்கிய பூண்டி ஊன்றீஸ்வரர் ஆலயம் பற்றி காண்போம்.

சுந்தரருக்கு ஊன்றுகோல் வழங்கிய பூண்டி ஊன்றீஸ்வரர்!

KarthigaBy : Karthiga

  |  11 Oct 2023 6:00 AM GMT

சைவ சமய குறவர்களில் ஒருவர் சுந்தரமூர்த்தி நாயனார் . இவர் திருவாரூரில் பரவை நாச்சியாரை மணந்து வாழ்ந்து வந்தார். சிறிது காலங்கள் உருண்டோடிய பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சிவசேவை செய்து வந்த சங்கிலி நாச்சியாரை மணக்க முடிவு செய்தார். இது குறித்த அவர் சிவபெருமானிடம் கூற சிவபெருமானோ இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது என மறுப்பு தெரிவித்தார். சுந்தரர் தன்னுடைய நிலையில் மாறாமல் இருந்ததால் சிவபெருமானே அவருக்கு சங்கிலி நாச்சியாரை தன் தலைமையில் இரண்டாவது திருமணம் செய்து வைத்தார். அப்போது இனிமேல் முதல் மனைவியான வரவே நாச்சியார் பார்க்க செல்லக்கூடாது என்று சிவபெருமான் கூறினார். அதற்கு செல்ல மாட்டேன் என்று கூறினார் சுந்தரர் .


சங்கிலி நாச்சியாரும் சுந்தரரிடம் நீங்கள் என்னை விட்டு பிரிந்து போகக்கூடாது என கூறினார். மேலும் சத்தியமும் செய்து கேட்டார். உடனே சுந்தரர் அந்த இடத்தில் இருந்த மகிழம்பூ மர தடியில் நின்று "உன்னை விட்டு பிரிந்து மீண்டும் முதல் மனைவியுடன் செல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தார். சில காலங்கள் சங்கிலி நாச்சியாருடன் வாழ்ந்து வந்த சுந்தரமூர்த்தி நாயனருக்கு திடீரென முதல் மனைவி பரவை நாச்சியாரின் நினைப்பு வந்து மனதை வருத்தியது. அவரை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார். அதனால் சிவபெருமானுக்கும் சங்கிலி நாச்சியாருக்கும் தான் செய்துகொடுத்த சத்தியத்தை மீறி திருவொற்றியூரில் இருந்து திருவாரூருக்கு கிளம்பினார்.


சுந்தரர் திருவொற்றியூர் எல்லையை விட்டு அவர் வெளியேறிய போது சிவன் அவரது கண்களில் பார்வை பறிபோகும்படி செய்துவிட்டார். சத்தியத்தை மீறியதால் தன் கண் பார்வை போனதை உணர்ந்த சுந்தரர் சிவபெருமானிடம் தனக்கு கண்களை தரும்படி வேண்டினார். அவரோ கண்கள் தரவில்லை இரண்டு கண்களும் தெரியாமல் தட்டு தடடுமாறுபடியே திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் வந்து சேர்ந்தார் . சுந்தரமூர்த்தி நாயனார் இங்கும் சிவனிடம் தனக்கு கண்கள் தரும்படி கேட்டார். ஆனால் சிவனோ அமைதியாகவே இருந்தார்.


சுந்தரர் விடவில்லை பரம்பொருளாகிய நீங்கள் இங்கு தான் இருக்கிறீர்களா? இருந்தால் எனக்கு கண் தருவீர்கள் என்று சொல்லி வேண்டினார். சுந்தரரை கண்ட சிவபெருமான் இறங்கினாலும் அவருக்கு கண்களை தருவதற்கு பதிலாக ஊன்றுகோல் ஒன்றை மட்டும் கொடுத்தார் . தன் நண்பனான சிவன் தனக்கு அருள் செய்யாமல் விளையாடுகிறாரே என்று எண்ணிய சுந்தரருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் தனக்கு கண் தரும்படி சிவனிடம் வாக்குவாதம் செய்தார். சிவனோ இறுதிவரையில் அவருக்கு கண் தரவில்லை.


இதனால் கோபம் அதிகரித்த சுந்தரர் சிவன் கொடுத்த ஊன்றுகோலை தூக்கி வீசினார். அப்போது ஊன்றுகோல் அங்கிருந்த நந்திமீது பட்டுவிட்டது. இதனால் நந்தியின் வலது கொம்பு உடைந்து விட்டது. இதைக்கண்டு சிவபெருமான் ஆசிரமடைந்தார். ஆனால் அவரது மனைவியான மின்னொளி அம்மன் தவறு செய்வது மனித இயல்பு எனக் கூறி சிவபெருமானை சமாதானம் செய்தார் . மேலும் சுந்தரர் தடுமாறாமல் நடந்து செல்ல வழியில் மின்னல் போன்ற ஒளியை காட்டி வழி தந்தார். இதனால் இத்தல அம்மன் மின்னொளி அம்பாள் என்றும் கண்பார்வையிடந்த சுந்தரமூர்த்தி நாயனருக்கு கனிவாக பேசி அருளியதால் 'கனிவாய் மொழி நாயகி' என்றும் அழைக்கப்படுகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News