Begin typing your search above and press return to search.
தமிழ் புத்தாண்டு: சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு தரிசனம்.!
சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதால், குறைந்த அளவிலான பக்தர்களே சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

By :
இன்று சித்திரை 1 தமிழ்புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அனைத்து தரப்பு மக்களும் இன்று கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கட்டுப்பாடுடன் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதால், குறைந்த அளவிலான பக்தர்களே சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அனைவரும் முககவசம் அணிந்து கொண்டும், சானிடைசர் உபயோகித்த பின்னரே கோயில்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
Next Story