பெண்களின் பட்டுப் போகாத பிறந்த பாசம் பற்றிய ருசிகர தகவல்கள்.!
பெண்களின் பட்டுப் போகாத பிறந்த பாசம் பற்றிய ருசிகர தகவல்கள்.!

திருமணம், வளைகாப்பு, குழந்தை பிறப்பு, காதுகுத்து, மஞ்சள் நீராட்டி என அடுத்தடுத்து நடைபெறும் அனைத்து விஷயங்களிலும் பிறந்த வீட்டின் சொந்தங்கள் அவளோடு கூடி மகிழ்கிறார்கள். அதற்கு ஏற்றார் போல் பெண்களும் உடன் பிறந்த அண்ணன், தம்பிகளை கணவரிடமோ அல்லது கணவர் வீட்டாரிடமும் ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லை.
குடும்ப உறவுகளை தாய்மாமன் உறவு என்பது ஆழமானது. அது குழந்தையின் தாயை பொருத்தே அமையும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு குழந்தைக்கு தொட்டில் கட்டும் வழக்கம். இப்போதெல்லாம் மரத்தில் தொட்டில் என பலவகை தொட்டில்கள் வந்துவிட்டன. முன்பெல்லாம் வெள்ளைக் கயிறு பல வண்ணங்களுடன் கூடிய தொட்டில் கம்பு வெள்ளை வேட்டியில் கட்டப்படும் அதிகம். இப்போது இதை பல இடங்களில் காண முடியும். இதுதான் குழந்தைகளுக்கும் தாய்க்கும் இடையேயான பந்தம் தொடங்குகிறது. சகோதரி பிறக்கும் குழந்தையின் தாய்மாமன் தொட்டில் வாங்கி கொடுக்க வேண்டும். இதை ஒரு சம்பிரதாயமாக இல்லாமல் உறவை பலப்படுத்த ஏற்படுத்திய யுத்தி என்றே சொல்லலாம்.