Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.!

ThangaveluBy : Thangavelu

  |  5 July 2021 1:08 AM GMT

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக வேகமாக பரவியதை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 26ம் தேதி முதல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் தினசரி பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தது.





இந்நிலையில், தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்யலாம் என்று பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News