தருமபுரி: பெண்களே வடம் பிடித்து இழுத்த பெருமாள் கோயில் தேர்!
![தருமபுரி: பெண்களே வடம் பிடித்து இழுத்த பெருமாள் கோயில் தேர்! தருமபுரி: பெண்களே வடம் பிடித்து இழுத்த பெருமாள் கோயில் தேர்!](https://kathir.news/h-upload/2022/04/12/1348656-cs.webp)
தருமபுரி நகரில் அமைந்துள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சதேச ஸ்ரீ சென்னகேசவப் பெருமாள் கோயிலில் ஸ்ரீராமநவமி விழா கடந்த ஏப்ரல் 2ம் தேதி தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு தினந்தோறும் சாமிக்கு சிறப்பு ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்கார சேவைகள் நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து நவமி அபிஷேகம் மற்றும் ஸ்ரீராமர் அவதார அலங்கார சேவைகளும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த விழாவின் மிக முக்கிய நாளான இன்று (ஏப்ரல் 12) காலை ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோயில் தேரோட்டத்தை பெண்களே வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர்.
Source, Image Courtesy: Maalaimalar