Kathir News
Begin typing your search above and press return to search.

படிப்பாயாசம் ஏற்கும் பாலமுருகன் எந்த ஊரில் அமைந்துள்ளார் தெரியுமா?

அருணகிரிநாதரால் பாடப்பெற்ற புகழுடைய ஆயக்குடி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில்.

படிப்பாயாசம் ஏற்கும் பாலமுருகன் எந்த ஊரில் அமைந்துள்ளார் தெரியுமா?

KarthigaBy : Karthiga

  |  10 Jun 2023 8:00 AM GMT

முற்காலத்தில் மல்லபுரம் என்ற இடத்திலிருந்து குளத்தை தூர்வாரியபோது மூலவரான பாலசுப்பிரமணிய சுவாமி யின் திருவுருவம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அந்த சிலையானது முருக பக்தரான சித்தர் ஒருவரின் சமாதிக்கு மேலே வைக்கப்பட்டு தற்போதுள்ள கோவில் எழுப்பப்பட்டது என்கிறார்கள்.


சிவன், சக்தி, சூரியன், விஷ்ணு விநாயகர் ஆகிய ஐந்து இறை சக்தியும் கோவிலில் உள்ள அரசு வேம்பு மாவிளங்கம், மாதுளை, கருவேப்பிலை ஆகிய ஐந்து மரங்களில் எழுந்தருளி இருக்கிறார்கள். மூலவரான பாலசுப்ரமணிய சுவாமி மயில்வாகனத்திற்கு அருகில் குழந்தை வடிவில் வீற்றிருக்கிறார். குழந்தை பேரு வேண்டுவோர் இங்கு வந்து வழிபட்டால் விரைவில் மழலை பேறு கிட்டும்.


வேண்டிக்கொண்ட செயல்கள் நிறைவேறிய பிறகு பாயாசத்தை நிவேதனமாக படைத்து அதனை கோவிலுக்கு அருகில் ஓடும் அனுமன் நதிக்கரையில் உள்ள படியில் ஊற்றி சிறுவர்களை அருந்த சொல்கிறார்கள். இதனை படிப்பாயாச நிவேதனம் என்கிறார்கள். சிறுவர்கள் உருவில் முருகனே வந்து பாயாச நிவேதனத்தை ஏற்பதாக ஐதீகம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News