Kathir News
Begin typing your search above and press return to search.

சங்கடஹர சதுர்த்தி தோன்றிய வரலாறு

விநாயகருக்கு மிக உகந்த நாளான சங்கடஹர சதுர்த்தி விரதம் தோன்றிய வரலாறு பற்றிய தகவல்

சங்கடஹர சதுர்த்தி தோன்றிய வரலாறு

KarthigaBy : Karthiga

  |  11 Nov 2022 4:15 AM GMT

மாதம்தோறும் பௌர்ணமிக்குப் பிறகு வரும் நான்காவது நாளான சதுர்த்தி திதி, சங்கடஹர சதுர்த்தி எனப்படும். ஆவணி, மாசி மாதத்தில் வருவதே மஹா சங்கடஹர சதுர்த்தி எனப்படும். 'சங்கட' என்றால் துன்பம் 'ஹர' என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.


வசிஷ்டரின் பரம்பரையில் தோன்றிய பரத்வாஜ முனிவர் ஒருமுறை நர்மதை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது நீராடிக் கொண்டிருந்த ஒரு மங்கையை பார்த்து மனம் மயங்கினார்.மோகித் அவர் அவளை அவந்தி நகருக்கு அழைத்துச் சென்று இல்லறம் நடத்தினார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தப் பெண் ஒரு தேவலோக மங்கை ஆவாள். குழந்தை பிறந்த பிறகு குழந்தையை விட்டுவிட்டு அவள் தேவலோகம் திரும்பி சென்று விட்டாள். பரத்வாஜ முனிவரும் குழந்தையை அவந்தி நகரிலேயே விட்டுவிட்டு மீண்டும் தன் தவத்தை தொடர்ந்தார். அக்குடந்தையை பூமாதேவி எடுத்து அரவணைத்து வளர்த்து வந்தாள். குழந்தையின் மேனி அக்னி போல செந்நிறமாக ஒளி வீசியதால் அக்குழந்தைக்கு அங்காரகன் என்று பெயர் சூட்டினாள்.


ஏழு வயது ஆனபோது பூமாதேவியிடம் அந்த குழந்தை அம்மா என் தந்தை யார் என்று தெரிந்து கொள்ள எனக்கு ஆசையாக உள்ளது என்னை என் தந்தையிடம் அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்டான். பூமா தேவியும் அக்குழந்தையை பரத்வாஜ முனிவரிடம் சென்று முனிவரே இவன்தான் தங்களது மகன் இவனை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டினாள். முனிவரும் தன் மகனை அகமகிழ்ந்து ஏற்றுக் கொண்டு பல கலைகளிலும் சிறந்த வல்லவனாக வளர்த்து வந்தார். முனிவரிடம் அங்காரகன் தந்தையே இவ்வுலகில் உள்ள எல்லா கலைகளிலும் நான் சிறந்து விளங்க வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். அதற்கு பரத் முனிவர் நீ விநாயகப் பெருமானை நோக்கி தவம் செய்தால் சர்வ சர்வ கலைகளிலும் வல்லவனாக திகழ்ந்து நீ நினைத்தது அத்தனையும் ஈடேறும் என்று கூறி உரிய மந்திரங்களை உபதேசம் செய்து அனுப்பி வைத்தார்.


அவந்தி நகரை அடுத்த ஒரு காட்டில் ஒரு நல்ல நாளில் தன் தவத்தை தொடங்கினான் அங்காரகன். பல வருடங்களாக கடுந்தவம் மேற்கொண்டதன் பலனாக மாசி மாதம் சதுர்த்தி திதி அன்று இரவு வேலை சந்திரோதயகாலத்தில் விநாயகப் பெருமான் அங்காரகனுக்கு காட்சி தந்தார். அதனைக் கண்டு அகம் மகிழ்ந்த அங்காரகன் விநாயகப் பெருமானை பலவாறு போற்றி துதித்தான். "ஐயனே எனக்கு தாங்கள் சில வரங்களை அருள வேண்டும்" என்று வேண்டினான். உன்னுடைய கடும் தவத்தால் கட்டுண்டேன். நீ கேட்ககும் வரங்கள் எதுவாயினும் தருகிறேன் கேள் என்று கூறினார் விநாயகர் . ஐயனே சர்வ மங்கள ரூபத்தோடு தங்களை தரிசித்த நான் அனைவராலும் மங்களன் என்று அழைக்கப்பட வேண்டும். தேவலோகத்தில் தேவாமிர்தம் பருகி அமரனாக வேண்டும். என்னை வழிபடுபவர்களுக்கெல்லாம் நான் செல்வம் அளிக்கும் கிரகமாக மாற வேண்டும். நான் தங்களை தரிசித்த இந்த சதுர்த்தி நாளை அனைவரும் கொண்டாட வேண்டும். யாரெல்லாம் இந்த சதுர்த்தி நாளன்று தங்களை வழிபடுகிறார்களோ அவர்களின் துயரங்களை நீங்கள் நீக்க வேண்டும் என்று பலவாறு வரங்களை கேட்டான்.


கனிவான முகத்துடன் அங்காரகனை நோக்கிய கணபதி 'நீ கேட்ட வரங்கள் அனைத்தையும் உனக்கு தருகிறேன்' என்று கூறியதோடு மட்டுமல்லாமல் 'யாரெல்லாம் சங்கடகர சதுர்த்தி அன்று என்னை வழிபடுகிறார்களோ அவர்களுடைய சங்கடங்கள் அனைத்தையும் நீக்கி வாழ்வில் அனைத்து வளங்களையும் தருவேன்' என்ற வரத்தையும் விநாயகர் பெருமான் தந்தருளினார். அந்த அங்காரகனே செவ்வாய் எனும் கிரகமாக அனைத்து மக்களுக்கும் செல்வமளிக்கும் கிரகமாகவும் இருந்து கொண்டிருக்கிறார். மற்ற சதுர்த்தி திதிகளை விட செவ்வாய்க்கிழமை சேர்ந்து வரும் சதுர்த்தி திதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News