Begin typing your search above and press return to search.
முருகனின் வேலில் சொருகப்பட்டிருந்த எலுமிச்சை பழம், ரூ.59,000க்கு ஏலம்.!
முருகன் வேலில் சொருகப்பட்ட எலுமிச்சை பழம் வருடம்தோறும் ஏலம் விடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி ரூ.59,000க்கு ஏலம் எடுத்தனர்.
By : Thangavelu
தமிழ் கடவுளான முருகன் வேலில் சொருகப்பட்டிருந்த எலுமிச்சை பழம் ரூ.59,000க்கு ஏலம் போனது. விழுப்புரம் மாவட்டம், திவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள பழமையான ரத்தினவேல் முருகன் கோவிலின் வேலில் சொருகப்பட்ட எலுமிச்சை பழம் ஒன்று ரூ.59,000க்கு ஏலம் போனது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
முருகன் வேலில் சொருகப்பட்ட எலுமிச்சை பழம் வருடம்தோறும் ஏலம் விடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி ரூ.59,000க்கு ஏலம் எடுத்தனர்.
இதனிடையே இந்த பழத்தை சாப்பிட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும், தொழில் வளர்ச்சி பெரும், குடும்ப பிரச்சினை தீரும் என்பது ஐதீகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
Next Story