Kathir News
Begin typing your search above and press return to search.

காவிரி நடுவில் அருளும் நட்டாற்றீஸ்வரர் ஆலயம்!

காவிரி ஆற்றின் நடுவில் உள்ள குன்றில் அமைந்த இயற்கை எழில் சூழ்ந்த ஆலயமாக விளங்குகிறது காங்கேயம் பாளையம் நட்டாற்றீஸ்வரர் ஆலயம்.

காவிரி நடுவில் அருளும் நட்டாற்றீஸ்வரர் ஆலயம்!

KarthigaBy : Karthiga

  |  15 Sep 2023 3:30 PM GMT

ஈரோடு கரூர் வழித்தடத்தில் ஈரோட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் கரூரில் இருந்து 52 கிலோமீட்டர் தொலைவிலும் சாவடிப்பாளையம் நால் ரோட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் காவிரி ஆற்றின் நடுவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். பேருந்து மூலம் வருவோர் சாவடிப்பாளையம் இறங்கிச் செல்ல வேண்டும் .திருக்கயிலாயத்தில் சிவன் பார்வதி திருமண வைபவத்தில் பங்கேற்க தேவர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் திருகைலாயம் சென்றதால் பூமியின் சமநிலையில் தடுமாற்றம் ஏற்பட்டது. வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது .


இதனை சரி செய்ய அகத்தியர் அழைத்த சிவபெருமான் தெற்கில் பொதிகை மலையில் நின்று உலகை சமப்படுத்தும்படி ஆணை இட்டார். இறைவன் இறவியின் திருமணத்தை நம்மால் பார்க்க முடியாது என்று அகத்திய தயங்கினார். அதற்கு சிவபெருமான் நீ இருக்கும் இடத்திலேயே என் திருமண காட்சியை காணும் பேரு பெறுவாயாக என்றார். அதன்படி தெற்கு நோக்கி பயணமானார் அகத்தியர் இதற்கிடையில் சூரபத்மன் கொடுமையால் சீர்காழியில் மறைந்து வாழ்ந்த தேவர்கள் போதிய நீர்வளம் இன்றி வாடினர் .இதனால் விநாயகரை வழிபட்டனர். அகத்தியரின் கமண்டலத்தில் உள்ள ஆற்று நீரை பூமியில் பாய வைக்க வேண்டினர்.


அதன்படி அகத்தியர் பயணம் செய்த குடகுமலை வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றினார் விநாயகர். அச்சிறுவனிடம் கமண்டலத்தை தந்த அகத்தியர் நான் சிவ வழிபாடு செய்து முடிக்கும் வரை இந்த கமண்டலத்தை தரையில் வைக்காமல் கையிலே வைத்திரு என்று கூறினார். அதற்கு அந்த சிறுவன் சரி ஆனால் ஒரு நிபந்தனை நான் நேரத்தில் வீடு செல்ல வேண்டும். நேரம் அதிகமானால் நான் தங்களை மூன்று முறை அழைப்பேன். தாங்கள் வரவில்லை என்றால் இதை தரையில் வைத்து விட்டு சென்று விடுவேன் என்றான் .அகத்தியரும் அதை ஏற்றுக்கொண்டார் .ஆனால் அகத்தியர் வழிபாட்டுக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே அவரை மூன்று முறை அழைத்துவிட்டு கமண்டலத்தை தரையில் வைத்து விட்டான் சிறுவன்.


வழிபாடு முடித்து வந்த அகத்தியர் இதை கண்டு கோபம் கொள்கிறார். அச்சிறுவனின் தலையில் மூன்று முறை கொட்டுகிறார். அப்போது சிறுவனாக வந்த விநாயகர் மறைந்து காகமாக வடிவெடுத்து கமண்டலத்தை கவிழ்த்து விடுகிறார் . கமண்டலத்தில் இருந்த நீர் நதியாக பாய்ந்து ஓடியது. காவிரி என பெயர் பெற்றது .விநாயகர் சுயரூபம் காட்டி அகத்தியருக்கு அருளினார். இப்படி காவிரி பாய்ந்த ஓடிய வழியில் ஏராளமான சிவாலயங்கள் உண்டு. அவற்றை வழிபட்டு பொதிகை மலைக்குச் சென்றார் அகத்தியர்.


அப்போது வழியில் வாதாபி வில்லவன் என்று இரு அசுரர்கள் வழிப்போக்கர்களாக வருபவர்களை கொன்று சாப்பிட்டு வந்தனர். இதை அறிந்த அகத்தியர் அந்த அரக்கர்களுக்கு முடிவு கட்ட எண்ணினார். அதன்படியே அடியார் வேடத்தில் இருந்த வில்லவன் அகத்தியரை சாப்பிட அழைத்து விருந்து வைத்தான் .இலையில் மாம்பழமாக வாதாபியை வைத்து பரிமாறினான். இதை உணர்ந்த அகத்தியர் அந்த மாங்கனியை முழுமையாக உண்டார். அப்போது வில்லவன் வாதாபி வெளியே வா என்று அழைத்தான்.


அகத்தியரின் வயிற்றை கிழித்துக்கொண்டு வெளியே வர முயன்ற வாதாபியை தன் மந்திர சக்தியால் வயிற்றிலேயே செரிக்கச் செய்தார் அகத்தியர்.இதனால் கோபம் கொண்ட வில்லவன் அகத்தியரை கொல்ல முயன்றான். அவனையும் பிரம்மாஸ்திர மந்திரத்தால் வதம் செய்தார் அகத்தியர் .இதனால் அந்த பகுதியில் வாழும் மக்கள் அரக்கர்களின் தொல்லையில் இருந்து விடுபட்டனர். அகத்தியரால் அழிவை சந்தித்த வாதாபி வில்லவன் ஆகிய இரு அரக்கர்களும் அசுர பெண்ணுக்கும் துர்வாச முனிவருக்கும் பிறந்தவர்கள் . எனவே அகத்தியருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது .


அந்த தோஷம் நீங்க சிவ வழிபாடு சிறந்த வழி என்பதை அறிந்த அவர் காவிரி ஆற்றின் நடுவில் உள்ள குன்றில் மணல் லிங்கம் செய்து அதற்கு ருத்திராட்ச மாலை அணிவித்து வழிபட்டார். பூஜை முடித்து மாலையை யை எடுக்கும் என்ற போது அது வரவில்லை . அதற்கு காரணம் இறை அருளே என்பதை உணர்ந்த அகத்தியர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க பெற்றவராக பொதிகை மலைக்கு பயணம் ஆனார் என்கிறது தல புராணம்.


காவிரி உற்பத்தியாகும் குடகுமலையிலிருந்து வங்கக்கடலில் சங்கமிக்கும் காவிரி பூம்பட்டினம் வரையிலான சுமார் 630 கிலோ மீட்டர் தொலைவில் நடுவிலும் ஆற்றின் இடது கரை வலது கரை ஆற்றின் நடுவிலும் அமைந்த தலத்தின் இறைவன் என்பதால் நடு +ஆற்று + ஈசர்= நட்டாற்றீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அகத்தியர் வடழிபட்டதால் அகத்தீஸ்வரர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News