Kathir News
Begin typing your search above and press return to search.

கடன் தொல்லை நீங்கி சொந்த வீட்டில் சுகமாய் வாழ நீங்கள் வணங்க வேண்டிய தெய்வமும் செய்ய வேண்டிய பரிகாரமும்!

கடன் தொல்லை நீங்கி சொந்த வீட்டில் சுகமாய் வாழவும் எந்த பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கவும் பின்வரும் விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

கடன் தொல்லை நீங்கி சொந்த வீட்டில் சுகமாய் வாழ நீங்கள் வணங்க வேண்டிய தெய்வமும் செய்ய வேண்டிய பரிகாரமும்!

KarthigaBy : Karthiga

  |  20 Sep 2023 6:00 PM GMT

கடன் தொல்லை நீக்கி சொந்த வீட்டில் வசிக்கும் யோகம் தருபவர் செவ்வாய் பகவான். செவ்வாய் விரதம் இருந்து சில பரிகாரங்களை செய்தால் சொந்த வீடு கட்டும் யோகம் கிடைக்கும் கடன் தொந்தரவுகள் நீங்கும்.இன்றைக்கு கடன் இல்லாத மனிதர்களே இல்லை. ருணம், ரோகம் சத்ரு இந்த மூன்றும் இல்லாதவன் நிம்மதியான மனிதன். ஆனால் ஒரு சிலருக்கு கடன் இருந்தால்தான் தூக்கமே வரும். அதே போல சொந்த வீடு ஆசையும் சிலருக்கு நிறைவேறாது. வாடகை வீட்டிலேயே வாழ்க்கையை கழிப்பார்கள். சொந்த வீடு வாங்கவும், அப்படியே வாங்கினாலும் அதில் வசிக்கவும் யோகம் வேண்டும்.


செவ்வாய்கிழமை மங்களகரமான நாள். பூமிக்கு அதிபதியான செவ்வாய் பகவான் ஆட்சி செய்யும் நாள். செவ்வாய் பகவான் ஒருவர் ஜாதகத்தில் வலிமையாக இருந்தால் அவர் வீடு, நிலம் சொத்துக்கள் வாங்கி சொந்த வீட்டில் வசிப்பார். அதே நேரம் செவ்வாய் உங்க ஜாதகத்தில் வீக் ஆக இருந்தால் சொந்த வீடு சிலருக்கு அமையவே அமையாது. அதே போல கடன் பிரச்சினை காலை சுற்றிய பாம்பாக இருந்து கவலையை ஏற்படுத்தும். கடன் தொல்லை நீங்கவும், சொந்த வீடு வாங்கவும் சில பரிகாரங்கள் இருக்கின்றன. அந்த பரிகாரங்களை செய்தால் கடன் பிரச்சினைகள் தீரும் கூடவே சொந்த வீடு யோகமும் அமையும்.


நவக்கிரகங்களில் முக்கியமான கிரகம் செவ்வாய். இது ராஜகிரகம். சூரியனின் தளபதி. ஒரு மனிதனுக்கு ரத்தம், தைரியம், பூமி சம்பந்தமான சொத்துக்கள் எதிர்ப்பு சக்தி, செவ்வாய் தோஷம்,சொந்த வீடு, இது எல்லாத்துக்கும் மூலகாரணமாக விளங்குபவர் செவ்வாய் பகவான். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட முருக பகவானை வணங்கி செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருக்க வேண்டும்.

11 செவ்வாய்கிழமைகளில் விரதம் இருந்து முருகனை வணங்கினால் அந்த முருகன் அருளினாலும் செவ்வாய் பகவான் அருளினாலும் வீடு கட்டும் யோகம் அமையும். அதே போல செவ்வாய்கிழமை வெற்றிலையில் மாலை கட்டி விநாயகருக்கு மாலை சாற்றி வணங்கினால் கடன் பிரச்சினை தீரும்


Next Story
கதிர் தொகுப்பு
Trending News