Kathir News
Begin typing your search above and press return to search.

எழுத தொடங்குவதற்கு முன்னர் 'பிள்ளையார் சுழி' போடுவது ஏன்?

மனிதர்கள் பொதுவாக எழுத தொடங்குவதற்கு முன்னர் பிள்ளையார் சுழி போட்டு எழுதுவார்கள். அதன் காரண காரியம் பற்றி அறிவோம்.

எழுத தொடங்குவதற்கு முன்னர் பிள்ளையார் சுழி போடுவது ஏன்?
X

KarthigaBy : Karthiga

  |  4 Nov 2023 7:00 AM GMT

சிலர் ஏதாவது எழுதுவதற்கு முன்பாக 'உ' என பிள்ளையார் சுழி போட்ட பிறகு எழுத தொடங்குவார்கள். ஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே கணேசாய நமக, நாராயணாய நமஹ, சிவாய நம என்று மந்திரங்களை சொல்கிறோம். இதில் ஓம் என்பதை அ, உ , ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது அ, உ, ம் என்ற எழுத்துக்களை இணைத்தால் 'ஓம்' என்று வரும். 'அ' என்பது படைப்பதையும், 'உ' என்பது காப்பதையும், 'ம்' என்பது அழிப்பதையும் குறிக்கும்.


'அ' என்பது முதல் எழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது.'உ'என்பது உயிர் எழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவது ஆக வருகிறது. மெய்,வாய், கண், மூக்கு செவி எனும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால் ஆயுள் அதிகரிக்கும் என்பதும் ஆயுள் கூட மனிதர்கள் தொடங்கிய காரியம் தடை இன்றி நடக்கும் என்பதும் தெரிந்த விஷயம். மேலும் 'உ' என்பது காத்தல் எழுத்து என்பதால் இறைவன் நம்மை பாதுகாப்பதை குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால் நமக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும். இதற்காக 'உ' என எழுதுகிறோம்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News