Kathir News
Begin typing your search above and press return to search.

முனிவர்கள் தவத்தினால் பிரதமர் மோடி நமக்கு கிடைத்து இருக்கிறார்... தருமபுர ஆதீனம் புகழாரம்..

முனிவர்கள் தவத்தினால் பிரதமர் மோடி நமக்கு கிடைத்து இருக்கிறார்... தருமபுர ஆதீனம் புகழாரம்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Dec 2023 4:17 AM GMT

இந்தியாவில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு உத்திரபிரதேசத்தில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டுமான பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாத கடைசி கட்டுமான பணிகளில் இருக்கும் அயோத்தி ராமர் கோயில் இந்தியாவில் மட்டுமல்லாது உலக தரப்பில் உள்ள அனைத்து இந்துக்களையும் தன் பக்கம் ஈர்த்து இருக்கிறது என்று கூட சொல்லலாம். இதன் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் எடுத்த மிகப்பெரிய முயற்சி இருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும்.



இந்த நிலையில் தருமபுர ஆதீனம் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை பற்றி தன்னுடைய கருத்தை பகிர்ந்து இருக்கிறார் அந்த ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி அவர் கூறும் பொழுது, தவ முனிவர்கள் செய்த தவத்தினால் நமக்கு பிரதமர் மோடி கிடைத்திருப்பதாக தருமபுர ஆதீனம் புகழாரம் சூட்டியுள்ளார். அது மட்டும் கிடையாது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தவ பலநாள் மட்டும் தான் தற்பொழுது மிகவும் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டுமானம் பணி தொடர்வதாகவும் அது தற்பொழுது குடமுழக்கு வரை சென்று இருப்பதாகவும் தருமபுர ஆதீனம் குறிப்பிட்டு இருக்கிறார்.


சீரும் சிறப்புமாக தற்பொழுது ராமர் கோவிலின் குடமுழக்கு விழா சிறப்பாக நடைபெற வேண்டும் அதற்கு எல்லாம் வல்ல பெருமாளை வேண்டிக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சீரிய முயற்சியின் காரணமாக மிகவும் பிரமாண்டமான உயரிய கலசங்களுடன் ராமர் கோயில் கட்டுமான எழுந்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News