Kathir News
Begin typing your search above and press return to search.

சக்கரத்தாழ்வாருக்குப் பின் நரசிம்மர் இருப்பது ஏன்?

சக்கரத்தாழ்வார் பற்றியும் அவருக்கு பின்னால் யோக நரசிம்மர் இருப்பது குறித்தும் காண்போம்.

சக்கரத்தாழ்வாருக்குப் பின் நரசிம்மர் இருப்பது ஏன்?
X

KarthigaBy : Karthiga

  |  31 Aug 2024 2:38 PM GMT

திருமாலின் கையில் உள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர். சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக தீரும் என்பது ஐதீகம். பக்தனான பிரகலாதனை காக்க திருமால் நரசிம்மராக அவதரித்தார். தாயின் கருவில் இருந்து வராததாலும் கருடருடன் வராத காரணத்தாலும் இந்த அவதாரத்தை அவசர திருக்கோலம் என்பர். பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீ நரசிம்மமூர்த்தி யோக வடிவில் சக்கரத்தாழ்வாருக்கு பின்புறத்தில் இருப்பார்.

நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால் போதும். அவர் வேகமாக சுழல்வார். அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து உடனடியாக குறைகளை தீர்ப்பதாக ஐதீகம். சக்கரத்தாழ்வாரை நம்பினால் சங்கடம் நீங்கி வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

நாளை என்பது நரசிம்மருக்கு கிடையாது. துன்பத்திலிருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன்களை அடைய சக்கரத்தாழ்வாரையும் நரசிம்மரையும் ஒருசேர வழிபடுவது மிகச் சிறப்பு. இதன் அடிப்படையில் தான் சக்கரத்தாழ்வாருக்குப் பின் ஸ்ரீ நரசிம்மர் இருக்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News