மதுரை சித்திரை திருவிழா: கோலாகலமாக தொடங்கிய மீனாட்சி அம்மன் கொடியேற்றம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் சுவாமி சன்னதி முன் கொடியேற்றம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.திருவிழா நாட்களில் தினமும் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை வீதி உலா வருகிறார்கள்.
மே 6 முதல் முக்கிய நிகழ்வாக அம்மன் பட்டாபிஷேகம் இரவு 7:35 மணி முதல் 7:59 மணிக்குள் நடக்கிறது. மேலும் மே 7 திக்குவிஜயத்தை தொடர்ந்து, மே 8 காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. மே 9 மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. மே 10 தீர்த்தவாரி உற்ஸவத்துடன் மீனாட்சி அம்மன் கோயில் நிகழ்வுகள் நிறைவுபெறுகின்றன.
இதன் தொடர்ச்சியாக மே 11 கள்ளழகர் எதிர்சேவை, மே 12ல் ஆற்றில் சுவாமி இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சித்திரை திருவிழாவின் கடைசி நிகழ்வான வைகை ஆற்றல் கள்ளழகர் தங்க குதிரையில் எழுந்தருளும் நிகழ்வு உலகப் பிரசித்தி பெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.