Kathir News
Begin typing your search above and press return to search.

தெய்வீக சக்தி உடைய விருட்சங்களும் நன்மைகளும்!

தெய்வீக சக்தி உடைய மரங்கள் பற்றியும் அதனை வளர்ப்பதினால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும் காண்போம்.

தெய்வீக சக்தி உடைய விருட்சங்களும் நன்மைகளும்!
X

KarthigaBy : Karthiga

  |  24 May 2024 4:57 PM GMT

மாமரம்:மகாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமடையவை. இதன் காரணத்தினாலேயே எல்லா விதமான பூஜைகளிலும் மாவிலைகள் பயன்படுத்தப்படுகின்றன. சுப காரியங்கள் செய்யும்போதும் வீடுகளில் மாவிலைகள் தோரணமாக கட்டி தொங்க விடப்படுகிறது .

அரசமரம்:அரசமரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கீழே அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைக்கூடும். மரத்தின் விழுதுகள் உடல் குறைவை நீக்கும் தன்மையுடையது.

மருதாணி மரம்:மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை இம்மரத்தின் பழங்களை தூங்கும்போது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கெட்ட கனவுகள் வராது.

ருத்ராட்ச மரம்:ருத்ராட்ச மரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. ருத்ராட்ச கொட்டையை உடலில் அணிந்து கொண்டால் ரத்தம் சுத்தமாகும். ரத்த அழுத்தம் சீராகும். கோபம் குறையும். மனதில் சாந்தம் உண்டாகும்.

சர்ப்பகந்தி:இம் மரத்தின் அருகே பாம்புகள் வராது. மரத்தின் குச்சிகளை உடலில் கட்டிக் கொண்டால் பாம்புகள் தீண்டாது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News