Kathir News
Begin typing your search above and press return to search.

பணச்சிக்கலை சமாளிக்க விளக்கு பரிகாரம் செய்வது எப்படி?

பணச்சிக்கலை சமாளிக்க விளக்கு பரிகாரம் செய்வது எப்படி?

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  8 Feb 2022 1:51 AM GMT

வீட்டில் மங்களம் பெருக ஒவ்வொரு வீடுகள் தோறும் விளக்கேற்ற வேண்டும் என்பது நம் மரபாகும். விளக்கு என்பது இலட்சுமி கடாக்‌ஷத்தின் அடையாளம். வீட்டில் எரியும் தீப ஒளிச்சுடர் மிகப்பெரிய ஆகர்சனத்தை வீட்டிற்கு அளிக்கும். விளக்குகளில் பல முகங்கள் கொண்ட விளக்குகள் இருப்பதை நாம் காண முடியும். அதன் பொருள்யாதெனில் ஒவ்வொரு விதமான முகமுள்ள விளக்கினை ஏற்று கிற போதும் ஒவ்வொரு விதமான பலன் நமக்கு கிடைக்கிறது. விளக்கு எரியும் திசை, எத்தனை சுடர்கள் என்பதை பொருத்து அதன் பலன் மாறுபடும். விளக்கிற்கு இறையாற்றலை உள்ளிளுக்கும் தன்மை உண்டு. எனவே தான் வீடுகளில் தினசரி விளக்கினை ஏற்றினால் அனைத்து விதமான தோஷங்களும் நீன்கும் என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி பொருளாதார மேன்மைக்கும் இந்த விளக்கு பரிகாரம் உதவும் என்பது நம்பிக்கை. இந்த வழிபாட்டை நாம் தொடர்ந்து கடைப்பிடித்தால் பொருளாதார சிக்கல்கள் நீங்கும்.

ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு அதிபதி உண்டு. இவர்களை திசையின் தேவதைகள் என்றும் அழைப்பர். இந்திரன் கிழக்கு திசையின் அதிபதி ஆவார். விளக்கினை கிளக்கு திசையில் ஏற்றினால் இந்திரனை போன்ற வாழ்வு அமையும் என்பது சாஸ்திரன்கள் சொல்லும் உண்மை. வருண பகவான் மேற்கு திசையின் அதிபதி ஆவார். அடுத்து குபேரன் வடக்கு திசையின் அதிபதி ஆவார். மாலை வந்த வுடன் விளக்கு ஏற்றும்போது கிழக்கு பக்கம் பார்த்த ஒரு விளக்கையும் மேற்கு பக்கம் பார்த்த ஒரு விளக்கும் வடக்கு பார்த்த ஒரு விளக்கும் ஒரே நேர்கோட்டில் ஏற்றி வைக்க வேண்டும். இந்த விளக்கில் ஏற்றும் ஜோதியானது மூன்று திசைகளை பார்த்தவாறு இருக்க வேண்டும். அதாவது நடுவில் இருக்கும் விளக்கு கிழக்கு திசை பார்த்தும் அதற்க்கு இடது புறம் இருக்கு விளக்கு மேற்கு திசை பார்த்தவாறும், அதற்கு வலது புறம் இருக்கும் விளக்கு வடக்கு திசை பார்த்தவாறும் இருக்க வேண்டும். மேற்கு திசை பார்த்த விளக்கு யோகத்தை தரும் வடக்கு திசை பார்த்த விளக்கு செல்வதை தரும்.

இது வெறும் விளக்கேற்றும் செயல்முறை பணச்சிக்கல் தீருவதற்கான ஒரு வகை பரிகாரம். எனவே இந்த விளக்கு பரிகாரத்தை தினசரி செய்து வருவதால் நமக்கு சகலவிதமான சிக்கலையும் தீர்க்கும் வல்லமை கிடைக்கும். அதிர்ஷ்டம் கைக்கூடி வரும் என்பது ஐதீகம். இவ்வாறு தீபமேற்றும் போது நமக்கும் பிறர்க்கும் நன்மையே நடக்க வேண்டும் என்று மனதார வேண்டி கொள்வது மிகுந்த நற்பயன்களை தரும். இந்த தீபத்தில் உங்கள் விருப்பம் போல எத்தனை முகம் கொண்ட விளக்கிலும் ஏற்றலாம். ஒரு முகம் கொண்ட அகல் விளக்கிலும் ஏற்றலாம். தொடர்ச்சியாம் ௨௧ அல்லது ௪௨ நாட்கள் இந்த பரிகாரத்தை செய்து வருவது முழுமையான பலனை நல்கும் என்கின்றனர் ஆன்மீக பெரியோர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News