Kathir News
Begin typing your search above and press return to search.

விதியை வென்று தலையெழுத்தையே மாற்றும் வல்லமை படைத்த தெய்வம் - அறிவோம் ஆன்மீகம்

முருகா முருகா என்று மனமுருகி வணங்குவோருக்கு விதி பயனால் ஏற்படக்கூடிய கொடுமைகளையும் மாற்றி அமைக்கக்கூடிய வல்லமை கொண்ட தெய்வமாக அந்த குமர கடவுள் விளங்குகிறார்.

விதியை வென்று தலையெழுத்தையே மாற்றும் வல்லமை படைத்த தெய்வம் - அறிவோம் ஆன்மீகம்

KarthigaBy : Karthiga

  |  28 Jun 2023 6:30 AM GMT

உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் அவனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை அனுபவித்து வருவதாக ஆன்மீகம் எடுத்துரைக்கிறது. ஒரு மனிதன் பிறப்பதற்கு முன்பாக அவனது தலையில் படைப்பு கடவுளான பிரம்மதேவன் அவனது வாழ்வின் நிலை பற்றி எழுதுவதாக ஐதீகம். இதனை தான் "தலையெழுத்து படி தான் வாழ்வு நடக்கும்" என்பார்கள். பிரம்மனின் தலையெழுத்தின் அடிப்படையில் நவகிரகங்கள் மனித வாழ்வில் நன்மை தீமைகளை ஏற்படுத்துகின்றன .


ஆனால் முருகப்பெருமானின் முதன்மை பக்தனாக விளங்கிய அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழ் நூலில் "பிரம்மனின் தலையெழுத்தை மாற்ற முடியும்" என்கிறார் அந்த நூலில் அருணகிரிநாதர் "நின் கால் பட்டு அழிந்தது அயன் கையெழுத்து" என்று பாடுகிறார். அதன்படி முருகப்பெருமானை சரணடைந்தால் விதியை வெல்லும் வலிமை உண்டாகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News