Kathir News
Begin typing your search above and press return to search.

மஹா மிருத்யுஞ்ஜெய் மந்திரம் சொல்வதால் ஏற்படும் அதிசய பலன்கள்! ஆச்சர்ய தகவல்!

மஹா மிருத்யுஞ்ஜெய் மந்திரம் சொல்வதால் ஏற்படும் அதிசய பலன்கள்! ஆச்சர்ய தகவல்!

மஹா மிருத்யுஞ்ஜெய் மந்திரம் சொல்வதால் ஏற்படும் அதிசய பலன்கள்! ஆச்சர்ய தகவல்!

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  21 Dec 2020 5:45 AM GMT

இந்திய புராணங்களில் மிகவும் பழமையான மற்றும் முக்கியமான மந்திரங்களுள் ஒன்று மஹாமிருத்யுஞ்ஜெய் மந்திரம். இந்த மந்திரம் சிவ பெருமானை மனதிலிருத்தி சொல்லப்படுவது. மஹாமிருத்யுஞ்ஜெய் என்கிற வார்த்தை இந்தி மொழியிலானது. இதில் மஹா என்பது புனித அல்லது பிரமாண்டமானது என்பதையும், மிருத்தியுஞ் என்பது மரணத்தையும், ஜெய் என்பது வெற்றியையும் குறிக்கும் சொற்களாகும். இதன் முழுமையான பொருள் மரணத்தை வென்றவர்.

இந்த மந்திரத்தை ருத்ர மந்த்ரா மற்றும் த்ரையம்பக மந்த்ரா என்றும் அழைக்கின்றனர். இந்த மந்திரத்தை வழங்கியவர் ரிஷி மார்கண்டேயர். இந்த மந்திரத்தின் பொருள் யாதெனில், சிவபெருமானே எங்கள் இருகண்களுக்கு பின்னேயிருக்கும் மூன்றாம் கண் மீது எங்கள் கவனத்தை குவிக்கிறோம், இதன் மூலம் தங்களை உணரும் வல்லமையை நாங்கள் பெறுவோம். இதன் மூலம் ஆனந்தமாக, நிறைவாக உணருவோம். அழிவற்றத்தன்மை என்பது நிச்சயம் சாத்தியமில்லை ஆனால் எங்கள் அழிவிற்கு முன்பான சில காலநீட்சியை உங்கள் அருளால் நாங்கள் பெறலாம்.

இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் ஏற்படும் பலன்கள் யாதெனில், உணர்வுரீதியாக, உடல்ரீதியாக மற்றும் மன ரீதியாக நாம் நன்மைகளை பெற முடியும். அதற்கு இந்த மோட்ச மந்திரம் உதவும். இதன் மூலம் அழிவற்றத்தன்மையை நீண்ட நல் ஆயுளை நாம் பெற முடியும். சில புராணங்களின் அடிப்படையில், மஹாமிருத்யுஞ்ஜெய் மந்திரம் என்பது பல ரிஷிகளால் உபயோகிக்கப்பட்டது. மேலும் தக்‌ஷனின் மகளாக அவதரித்திருந்த சதி தேவி அவர்களால், தன் தந்தையின் சாபத்தால் சபிக்கப்பட்டிருந்த சந்திரனை மீட்க பயன் படுத்தப்பட்டது . தக்‌ஷ பிரஜாப்பதி வழங்கிய சாபத்தால் தன் உயிரை இழக்க சந்திரன் இந்த மந்திரத்தை உச்சரித்ததால் சிவபெருமானை அவரை சாபத்தில் இருந்து விடுவிக்க அவரை தன் தலையில் சூடிக்கொண்டார்.

அதனால் யாரும் எதிர்பாராத வகையில் உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க நல்ல ஆரோக்கியமான ஆயுளை பெற இந்த மந்திரத்தை பாராயணம் செய்யலாம். மேலும் தன்னுடைய உடலில் சாம்பலை ( விபூதி) சிவபெருமான் பூசிக்கொண்ட போதெல்லாம் இந்த மந்திரம் சொல்லப்பட்டது. ஜபம், ஹோமம் போன்ற முக்கிய ஆன்மீக நிகழ்வுகளில் இந்த மந்திரம் நிச்சயம் இடம்பெறும். காயத்திரி மந்திரம் சுத்திகரிக்கவும், இடத்தை சூழலை சக்தியூட்டவும் சொல்லப்படுவதை போல, மஹாமிருத்யுஞ்ஜெய் மந்திரம் என்பது புத்துணர்ச்சி, ஆரோக்கியத்திற்காக சொல்லப்படுவது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News