Kathir News
Begin typing your search above and press return to search.

மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள் உணர்த்தும் உண்மைகள்!

மும்மூர்த்திகளில் ஒருவரான மகாவிஷ்ணு அனைவரையும் காக்கக்கூடிய பேராற்றல் கொண்டவர். அவரின் 10 அவதாரங்களின் நோக்கம் பற்றி காண்போம்.

மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள் உணர்த்தும் உண்மைகள்!

KarthigaBy : Karthiga

  |  12 Feb 2024 5:15 AM GMT

1.மச்ச அவதாரம் : உலகில் தோன்றிய முதல் உயிரினம் கடலில் தோன்றிய unicellular உயிரினமாகிய கடல் உயிரினம் தான். இதனை அறிவியல் பூர்வமாக நமக்கு எடுத்துரைக்கிறது மச்சாவதாரம்.

2.கூர்ம அவதாரம் :reptiles ஊர்வன அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி. நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம். இதனை அறிவியல் பூர்வமாக நமக்கு எடுத்துரைக்கிறது கூர்ம அவதாரம்.

3.வராக அவதாரம்- mammals, பாலூட்டி உயிரினம் பரிணாம வளர்ச்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி விலங்கு உயிரினம்.

4.நரசிம்ம அவதாரம்- பாதி மிருகம் பாதி மனிதன். பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் இது.

5.வாமண அவதாரம்- குள்ள மனிதன் பரிணாம வளர்ச்சியின் முதல் மனிதன்.

6. பரசுராம அவதாரம்- மனிதனாக மாறிய பரிணாம வளர்ச்சி அவனை வேட்டையாட வேல், கத்தி செய்யும் தொழில்நுட்ப மனிதனாக மாற்றியது.

7. ராம அவதாரம்- விலங்குகளை வேட்டையாடும் மனிதனாக இருந்தவனை, தாய் தந்தை மக்கள் மனைவி சமுகம் என்ற சமுதாய மனிதனாக பரிணாம வளர்ச்சி அடைந்ததை எடுத்துரைக்கிறது.

8. பலராம அவதாரம்- வேட்டையாடி, ஒரு சமுகமாக வாழ ஆரம்பித்த மனிதன் அடுத்த பரிணாம வளர்ச்சியில் நிலங்களை உழுது பயிரிடும் வளர்ச்சியை அடைந்தான்.

9. கிருஷ்ண அவதாரம்- சமூகம், விவசாயம் செய்து வாழ்ந்த மனிதன் தனக்கான நீதி தர்மங்களை வகுத்தான். வாழ்க்கை நெறிமுறைகள், தர்மம், அதர்மம் என்பதை போதிக்கும் ஆசானாக பரிணாம வளர்ச்சியை அடைந்தான்.

10.கல்கி அவதாரம் – எப்போது எந்த நோக்கத்தில் எதனை உணர்த்த இந்த அவதாரம் எடுக்கப்படும் என்பதை நாம் பகவானிடத்திலேயே முழு உள்ளத்துடன் சமர்பிப்போம்.வட இந்தியர்கள் பலராமருக்கு பதிலாக புத்தரை பத்து அவதாரங்களுள் ஒருவராக கருதுகின்றனர். பாகவத புராணத்தில் இருபத்தைந்து அவதாரங்கள் கூறப்படுகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News