Kathir News
Begin typing your search above and press return to search.

விளக்கேற்றும் திரியால் வாழ்வின் திசையே மாற்ற முடியும் என்கிறது சாஸ்திரம்! எப்படி ?

விளக்கேற்றும் திரியால் வாழ்வின் திசையே மாற்ற முடியும் என்கிறது சாஸ்திரம்! எப்படி ?

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  16 Oct 2021 12:15 AM GMT

விளக்கேற்றும் திரியால் வாழ்வின் திசையே மாற்ற முடியும் என்கிறது சாஸ்திரம்! எப்படி?விளக்கு என்பதுஅறிவின், நேர்மறை ஆற்றலின் வெளிப்பாடு. தினசரி விளக்கேற்றுவது மிகவும் புனிதமானதாககருதப்படுகிறது. தொடர்ச்சியாக விளக்கு ஏற்றும் இடத்தில் இருள், அறியாமை மற்றும் தீமைகள்அகன்று போகும் என்பது நம்பிக்கை.

குறிப்பாக நெய்தீபம் ஏற்றுவது செழிப்பையும், அறிவையும், ஞானத்தையும் வழங்கும் என நம்பப்படுவதால் அனைத்துநிகழ்வுகளிலும், விழாக்களிலும், சகல விதமான இடங்களிலும் தீபம் ஏற்றுவதை ஒரு சடங்காகவேவைத்துள்ளனர். இவ்வாறு செய்வதால் இறையருளைநாம் வீட்டினுள் வரவேற்கிறோம் என்றே பொருள். தீபம்ஏற்றுவதில் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. அதிலொன்று ஆரத்தி, கடவுளுக்கோ அவரின் திருவுருவம்அல்லது திருவுருவ படம் ஆகியவற்றின் முன்போ மென்மையாக காட்டப்படும் தீபாராதனை மிகவும்சிறப்பு வாய்ந்தது. இவ்வாறு செய்வதால் அறிவியல் ரீதியாக காற்றில் இருக்கும் நச்சுக்கள்அழிந்து காற்றும் சுற்று சூழலும் சுத்திகரிக்கப்படுகிறது என்பது நம்பிக்கை.

ஒவ்வொருமுறை விளக்கு ஏற்றப்படும் போதும், "'சுபம் கரோட்டி கல்யாணம் ஆரோக்கியம் தன சம்பத்து,சத்ரு புத்தி விநாசய தீப ஜ்யோதிர் நமோஸ்துதே, தீப ஜோத்தி பர பிரம்ம, தீப ஜோத்தி ஜனார்த்தன,தீபோ மே ஹர து பாப்பம், தீப ஜோத்திர் நமோஸ்துதே "என்கிறமந்திரத்தை சொல்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். நீங்கள் ஏற்றும் தீபத்தின் திசைகூட உங்கள் வாழ்வை மாற்றக்கூடும் என்பது உங்களுக்கு தெரியுமா? நாம் பயன்படுத்தும் திரியும்திசையும் நம் வாழ்வின் விதியை மாற்றக்கூடும் என்கின்றன சாஸ்திரங்கள்.

வாழைத்தண்டில்திரி செய்து தீபமேற்றி வர நீங்கள் தெரியாமல் செய்த பாவத்தின் வினைகள் நீங்கும். மற்றும்முன்னோர்களின் சாபம் அல்லது வேறேதேனும் சாபமிருப்பின் அவை நீங்கும். பொதுவாக மன்னிப்புகிடைக்க இந்த திரியிலான தீபம் உதவும். பஞ்சினால்ஆன திரி மிகவும் வழக்கமாக பயன்படுத்தப்படுவது. பஞ்சு திரியில் தீபம் ஏற்றுவது மிகவும்நல்ல அதிர்வுகளை, சகுனத்தை வழங்கும். மஹாலட்சுமியின்அருளை பெறுவதற்கு ஒருவர் சிறிய வெள்ளை பருத்தி துணியை சுத்தம் செய்து அதனை பன்னீரில்நனைத்து திரி செய்து விளக்கேற்றி வரலாம். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் நீங்கள் லட்சுமியின் அருளை பெறுவது மட்டுமின்றி மன நிறைவையும்வாழ்வில் பெற முடியும். மஞ்சளில்குழைத்து திரியிடுவதால் திருமண தடைகள் ஏதுமிருப்பின் தீரும். தாமரை தண்டில் திரி செய்துவிளக்கேற்றினால் முன் ஜென்ம கர்மவினைகள் தீரும் என்பது நம்பிக்கை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News