Kathir News
Begin typing your search above and press return to search.

தீராத நோயும் தீர்க்க முடியாத கடனும் தீர வேண்டுமா ?சிவன் கோவிலுக்கு இந்த பொருளை தானமாக வழங்குங்கள்

சிவன் கோவிலுக்கு இரண்டு பொருள்களை தானமாக வழங்குவதன் மூலம் தீராத நோய்களும் தீர்க்க முடியாத கடன் பிரச்சனையும் விரைவில் தீர்ந்து நலம் பெறலாம்.

தீராத நோயும் தீர்க்க முடியாத கடனும்  தீர வேண்டுமா ?சிவன் கோவிலுக்கு இந்த பொருளை தானமாக வழங்குங்கள்

KarthigaBy : Karthiga

  |  1 Aug 2023 2:21 AM GMT

சிவன் கோவில்களில் முக்கியமான வழிபாடாக திகழ்வது பிரதோஷ வழிபாடு தான். இந்த பிரதோஷ வழிபாடு என்பது நம்முடைய பாவங்கள் கரைந்து குடும்பத்தில் உள்ளவர்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ நாம் வேண்டிக் கொள்வது என்பதும் அனைவரும் அறிந்ததே. அந்தப் பிரதோஷ காலத்தில் நாம் வாங்கிக் கொடுக்கும் சில பொருட்களால் நம்முடைய குடும்பம் கடன், வியாதி, குழப்பம் இல்லாமல் நிம்மதியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.


இந்த வகையில் நாம் முதலில் வாங்கித் தர வேண்டியது விபூதி. நல்ல சுத்தமான பசுசாணத்தில் செய்துவிபூதியை சிவ ஆலயத்திற்கு வாங்கி கொடுத்தால் அவர்கள் அதை அர்ச்சனைக்கும் கோவிலுக்கு வருபவர்களுக்கும் கொடுக்க பயன்படுத்திக் கொள்வார்கள். சிவ ஆலயத்தில் சிவனுடைய முக்கியமான பிரசாதமே இந்த விபூதி தான். இதை நாம் தானமாக கொடுக்கும் பொழுது இந்த பிரச்சனைகள் தீரும்.


அடுத்து நம் வீட்டிற்கு அருகில் இருக்கும் அரச மரத்திலிருந்து விழும் குச்சிகளை சேகரித்து காய வைத்து அதை சிவாலயத்திற்கு தானமாக கொடுக்கலாம். இந்த குச்சிகளை அவர்கள் கோவிலில் யாகம் செய்யும் போது பயன்படுத்திக் கொள்வார்கள். இப்படி செய்வதன் மூலம் கடனானது பெருமளவு குறைந்து விடும். பெரும்பாலும் கடன் தீருவதற்கான வழிபாடு அரச மரத்தை சுற்றியே அதிகம் இருக்கிறது.


அப்படியான அந்த மரத்தின் குச்சியை நாம் சிவாலயத்திற்கு தானமாக கொடுக்கும் பொழுது கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் விரைவில் நீங்க வழி பிறக்கும். இந்த இரண்டு பொருட்களையும் சிவன் கோவிலுக்கு தானமாக வழங்குவதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி வளமான வாழ்வு பெறலாம்.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News