Kathir News
Begin typing your search above and press return to search.

புரட்டாசி மாதத்தில் பெருமாள் வழிபாடு சிறப்பாக செய்யப்படுவதற்கான காரணம் என்ன?

எல்லா மாதங்களும் இறைவனை வழிபடக்கூடிய மாதங்கள் தான்.இருந்தபோதும் புரட்டாசி மாதம் மட்டும் பெருமாளை வழிபட உகந்த மாதமாக கருதப்படுவது ஏன் என்பது பற்றிய தகவல்.

புரட்டாசி மாதத்தில் பெருமாள் வழிபாடு சிறப்பாக செய்யப்படுவதற்கான காரணம் என்ன?

KarthigaBy : Karthiga

  |  22 Sep 2022 12:30 AM GMT

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. அதுவும் புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால் கூடுதல் பலன் கிடைக்கும். இந்த மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை கடைபிடிப்பவர்களை எண்ணிக்கை ஏராளம். நவகிரகங்களில் புதன் கிரகத்திற்குரிய மாதமாக இருப்பது புரட்டாசி .புதன் கிரகத்தின் அதிதேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு .எனவே தான் புதன் கிரகத்தின் அருளை பெற விஷ்ணுவின் வழிபாடு புரட்டாசியில் உகந்ததாக இருக்கிறது. மகாவிஷ்ணு எனப்படும் பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுக்குரிய வீடு கன்னி ராசி. இந்த ராசியில் சூரியன் அமர்வதும் புரட்டாசி மாதத்தில் தான் .


எனவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு பஜனைகள் செய்து வழிபடுவது ,ஆலயங்களில் பிரம்மோற்சவங்கள் நடத்துவது போன்றவை செய்யப்படுகின்றன .புதன் கிரகத்திற்கு நட்பானவன் சனி பகவான் அதனால் தான் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாள் வழிபாட்டிற்கு கூடுதல் சிறப்புக்குரியதாக இருக்கிறது. புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப்பற்களில் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும் துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவை வழங்குவது சிறப்பு.


ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் பெருமாளை நினைத்து விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அது முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளிலாவது பெருமாளுக்கு உரிய பூஜைகள் செய்து வழிபடுவதோடு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைக்கும். புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென மேலும் ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News