Kathir News
Begin typing your search above and press return to search.

பணவரவை ஈர்க்கும் லக்ஷ்மியின் அம்சமான மயிலிறகை வீட்டில் வைப்பது ஏன்?

பணவரவை ஈர்க்கும் லக்ஷ்மியின் அம்சமான மயிலிறகை வீட்டில் வைப்பது ஏன்?

பணவரவை ஈர்க்கும் லக்ஷ்மியின் அம்சமான மயிலிறகை வீட்டில் வைப்பது ஏன்?

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  3 Feb 2021 5:45 AM GMT

மயிலிறகு என்பது அழகியல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல, ஆன்மீகம் சார்ந்ததும் தான். மயிலறகு எனபது இந்து புராணங்களின் படி கிருஷ்ணருடன் தொடருடையது என்பதாலும், முருக பெருமானின் வாகனம் என்பதாலும் பல நல்லதிர்வுகளை கொண்டதாக கருதப்படுகிறது.

பல இல்லங்களில், வியாபார ஸ்தாபனங்களில் மயிலறகு வைத்திருப்பதை நாம் கண்டிருப்போம். மயிலறகு செல்வ வளத்தினை பெருக்கும் குறியீடாகவும் கருதப்படுகிறது.

புராணங்களின் படி ஒரு கதை சொல்லப்படுவதுண்டு, அதாவடு ஒரு முறை இராவணனுக்கும் இந்திரனுக்கும் போர் நிகழ்ந்தது. அச்சமயத்தில் அங்கிருந்த மயிலொன்று அதன் பரந்து விரித்ததாகவும் அந்த தோகையின் பின்னே இந்திரன் ஒளிந்தான் . பின் ஒருவாறாக போர் முடிவுக்கு வந்தது. தனக்கு தக்க சமயத்தில் உதவிய மயிலுக்கு வரமளிக்கும் விதமாக மயிலின் இறகுகளுக்கு சிறப்பு வல்லமைகளை இந்திரான் வழங்கினான் என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி இலட்சுமியின் அம்சமாகவும் மயில் கருதப்படுகிறது. அதனாலேயே மயிலறகை வீட்டில் வைத்திருப்பது, இலட்சுமியின் அருளை வீட்டினுள் வரச்செய்யும் என பக்தர்கள் நம்புகின்றனர். அறிவியல் ரீதியாக ஆராய்ந்தாலும், மயிலறகை வீடுகளைல் வைப்பதால், தேவையில்லாத பூச்சிகள் வீட்டினுள் நுழைவதில்லை.

பொதுவாக, மயில் என்பது ஒரு பாதுகாப்பு பறவையாக பார்க்கப்படுகிறது. எனவே அதன் இதர அம்சங்களும் மனிதர்களை காக்கும் என்பது நம்பிக்கை. மயிலறகு வீடுகளில் இருப்பது கெட்ட சக்திகள் நம்மை நெருங்காமல் வீட்டை காக்கும் என சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி, மயில்கள் என்பது உளவியல் ரீதியாக மன அமைதியை நல்கும் பறவையாக பார்க்கப்படுகிறது. அதனை பார்த்த மாத்திரத்திலேயே ஒருவர் மனதில் ஆனந்தம் பரவுவதை நம்மால் தவிர்க்க முடியாது. மேலும் ஒரு பறவையிடம் அழகும், கம்பீரமும் ஒரு சேர அமைந்திருப்பது இறைவனின் படைப்பில் ஆச்சர்யமான விஷயம். அதனுடைய அழகியல் வெளிபாடும், நடனமாடும் பாவமும், மழையை உணரும் தன்மையும் பிற பறவைகளிடமிருந்து அதனை தனித்து காட்டுகின்றது.

இந்து புராணங்களின் படி, இந்திரன் தன்னை தானே உருமாற்றி கொள்ள நெரும் போது, மயிலாக மாறினான் என்கின்ற குறிப்புகள் உண்டு. அழகியல், ஆன்மீகம், அறிவியல் சார்ந்த நுட்பம் அனைத்தின் அம்சமாக இருப்பதால் கூட மயில் தேசிய பறவையாக இருக்கலாம். பணத்தை மட்டுமல்ல சந்தோஷத்தையும் அதிகம் தரக்கூடியது மயிலிறகுகள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News