Kathir News
Begin typing your search above and press return to search.

மகேந்திர சிங் தோனி பிறகு இவர் தான் சென்னை அணிக்கு கேப்டன் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கருத்து.!

மகேந்திர சிங் தோனி பிறகு இவர் தான் சென்னை அணிக்கு கேப்டன் இங்கிலாந்து  அணியின் முன்னாள் வீரர் கருத்து.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  18 April 2021 7:00 AM GMT

இந்திய அணிக்கு எதிராக எப்போதும் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கி கொள்பவர் தான் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன். ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி எல்லா மேட்ச்களிலும் தோல்வி பெறும் என்று கூறி இந்திய ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தினார். இங்கிலாந்து அணியுடனான முதல் t20 ஆட்டம் முடிந்தவுடன், இந்திய அணியை விட ஐபிஎல்லில் ஆடும் மும்பை அணியே சிறந்த அணியாக இருக்கிறது என்று கருத்து கூறி மேலும் சர்ச்சையை கிளப்பினார்.அதுமட்டுமின்றி நாள்தோறும் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகள் குறித்தும் அவர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.


அந்தவகையில் நேற்று முன்தினம் சென்னை அணியை பற்றி கருத்து தெரிவித்த மைக்கேல் வாகன், தோனியின் ஓய்விற்குப் பிறகு சென்னை அணிக்கு யார் கேப்டன் ஆக வேண்டும் என்பது குறித்தும் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில் தோனிக்கு பிறகு சி.எஸ்.கே அணியானது ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக கொண்டே அணியை கட்டமைக்க வேண்டுமென்று கூறி இருக்கிறார். தனக்கு பிடித்த வெளிநாட்டு வீரர் ரவீந்திர ஜடேஜாதான் என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ ஜடேஜாவுக்கு A+ காண்ட்ராக்ட் கொடுக்காததை நினைத்து தான் மிகவும் வருந்துவதாக கூறியிருக்கிறார்.


மைக்கேல் வாகன் கூறிய இந்தக் கருத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்திய எழுத்தாளரும், கொல்கத்தா அணியின் முன்னாள் டைரக்டருமான ஜாய் பட்டாச்சாரியாவும் கருத்து தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல ஆண்டுகளாக சென்னை அணிக்காக ஜடேஜா தொடர்ந்து விளையாடி வந்தாலும் இதுவரை ஜடேஜா கேப்டன்சி செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமின்றி அடுத்த சென்னை அணியின் கேப்டன் குறித்து அனைவரும் பேசி வந்தாலும் நிச்சயம் தோனி கைகாட்டும் நபரே அடுத்து சி.எஸ்.கே அணிக்கு கேப்டனாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News