Kathir News
Begin typing your search above and press return to search.

எதிர்கால இந்திய அணிக்கான கேப்டன் ரெடி! இரகசியத்தை பட்டென்று போட்டுடைத்த சுனில் கவாஸ்கர்!

எதிர்கால இந்திய அணிக்கான கேப்டன் ரெடி! இரகசியத்தை பட்டென்று போட்டுடைத்த சுனில் கவாஸ்கர்!

MuruganandhamBy : Muruganandham

  |  14 May 2021 1:15 AM GMT

இனி வரும் காலங்களில் இவர் தான் சிறந்த கேப்டனாக இருப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் இருந்து வந்தார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது, அவருக்கு காயம் ஏற்பட்டதால், இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார்.

எனவே இந்த சீசனில் டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் அய்யருகு பதிலாக ,கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார். இவர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி, தற்போது வரை நடைபெற்ற போட்டிகளில் தரவரிசை பட்டியலில், முதலிடத்தில் இடத்தில் உள்ளது.

டெல்லி அணியை மிகசிறப்பாக வழிநடத்திய ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், ரிஷப் பண்டை வெகுவாக பாராட்டியும் பேசியுள்ளார்.





இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "ஐபிஎல் போட்டியின் சில ஆட்டங்கள் அவர் கற்றுக்கொள்ளக் கூடிய புத்திசாலி என்பதை காட்டியது. முக்கியமான கட்டத்தில் கூட அவருடைய சொந்த முறையில், இக்கட்டான நிலையை சமாளிக்கும் முடிவை எடுத்தார். அவர் சிறந்த எதிர்கால கேப்டன்களில் ஒருவர். இதில் சந்தேகம் ஏதுமில்லை" எனக் கூறியுள்ளார்.

மேலும் ரிஷப் பண்ட் கேப்டன்ஷிப் சிறப்பாக இருந்ததால் தான் டெல்லி அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News