Kathir News
Begin typing your search above and press return to search.

ஐ.பி.எல் போட்டியால் வந்த வினை! வாய்ப்பு வீணா போச்சே! திக்கித்தடுமாறும் இங்கிலாந்து வீரர்கள்!

ஐ.பி.எல் போட்டியால் வந்த வினை! வாய்ப்பு வீணா போச்சே! திக்கித்தடுமாறும் இங்கிலாந்து வீரர்கள்!

MuruganandhamBy : Muruganandham

  |  19 May 2021 10:56 AM GMT

ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இங்கிலாந்து சென்றுள்ள நியூஸிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 2ஆம் தேதி தொடங்குகிறது.

இதில் ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்களான மொயின் அலி, பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், சாம்கரன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இந்த டெஸ்ட் தொடருக்குத் தேர்வு செய்யப்படவில்லை.

கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் காரணமாக இந்தியாவிலிருந்து புறப்பட்டு வந்த இந்த வீரர்கள் பிரிட்டனில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர்.

இந்த காலக்கெடு முடிவடைய வேண்டும். அதன்பின் ஓய்வு தேவை என்பதால் இவர்கள் டெஸ்ட் தொடருக்குத் தேர்வு செய்யப்படவில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

நியூஸிலாந்துடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்தபின் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்காக இங்கிலாந்து செல்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி முடிந்தபின், இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது..

Next Story
கதிர் தொகுப்பு
Trending News