Kathir News
Begin typing your search above and press return to search.

உலக கோப்பையை இந்தியா வெல்ல கடினமாக போராட வேண்டும்.. கேப்டன் ரோகித் சர்மா..

உலக கோப்பையை இந்தியா வெல்ல கடினமாக போராட வேண்டும்.. கேப்டன் ரோகித் சர்மா..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 Aug 2023 11:00 AM GMT

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற இருக்கிறது. ஆனால் இந்திய அணி இடம் நான்காவது வரிசை பேட்டிங் செய்வதில் தற்போது சிக்கல் இன்னும் தீரவில்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங்கில் நான்காவது வரிசை நீண்ட காலம் ஆகவே பிரச்சனைக்குரியதாக இருக்கிறது குறிப்பாக யுவராஜ் சிங் பிறகு அந்த இடத்தை எந்த ஒரு பேட்ஸ்மானாலும் தற்போது வரை வலுவாக நிலை நிறுத்திக் கொள்ள முடியவில்லை ரொம்ப நாட்கள் ஆக நான்காவது தர வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடி வருகிறார்.


தற்போது அவரும் காயம் காரணமாக அந்த ஆட்டத்தில் விளையாடுவாரா என்பது தெரியவில்லை. அந்த வரிசையில் விளையாடிய வீரர்கள் அனைவரும் தற்பொழுது காயம் காரணமாக போட்டியிலிருந்து சற்று விலகி இருக்கிறார்கள். இருப்பினும் எந்த வீரரும் அந்த வரிசையில் கச்சிதமாக தற்போது வரை பொருந்தவில்லை. சரியான வீரர்களை அடையாளம் காண்பது தற்போது சவாலாக இருந்து வருகிறது.


இதன் காரணமாக நான் ஒரு கேப்டனாக இல்லாத போது கூட, இந்த வரிசையில் நிறைய வீரர்களை வருவதும் போவதையும் பார்த்து இருக்கிறேன். கட்டாயம் இதை இந்திய அணி சரி செய்து ஆக வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தங்களுக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொள்ள முடியும். உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு இதை சரி செய்ய வேண்டும் என்று இந்திய அணி முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News