Kathir News
Begin typing your search above and press return to search.

ஆசிய உலக கோப்பை கிரிக்கெட் போட்டி.. இந்திய அணிக்கு வந்த சோதனை..

ஆசிய உலக கோப்பை கிரிக்கெட் போட்டி.. இந்திய அணிக்கு வந்த சோதனை..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 Sep 2023 1:15 AM GMT

பாகிஸ்தான் அணி தன்னுடைய 2 ஆட்டத்திலும் விளையாடி விட்டது. இதன் மூலம் மூன்று புள்ளிகள் பெற்று பாகிஸ்தான் தற்போது சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. சூப்பர் ஃபோர் லிக் சுற்றுக்குள் தற்பொழுது பாகிஸ்தான் அணி சுலபமாக நுழைந்து இருக்கிறது பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் இடையிலான போட்டி எதிர் பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் உடன் இந்தியா விளையாடிய ஆட்டம் மழையால் ரத்தானதால் தற்போது ஒரு புள்ளிகள் மட்டுமே கிடைத்திருக்கிறது.


இதனால் இந்தியா சூப்பர் போர் சுற்றுக்கு தகுதி பெறுமா என ரசிகர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இந்தியா சூப்பர் ஃபோர் சுற்றுக்கு செல்ல என்ன வழி? இந்தியா தற்போது வரும் திங்கட்கிழமை நேபாள் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியும் இதே பாலக்கல்லே மைதானத்தில் தான் நடைபெறுகிறது. இந்த போட்டியின் மூலம் இந்திய அணிக்கு கண்டிப்பாக அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.


நேபாள அணிக்கு எதிரான ஆட்டம் என்பதால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு 100% இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இப்போதுதான் ஒரு விஷயமே இருக்கிறது. திங்கட்கிழமை மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒருவேளை மழை காரணமாக இந்த ஆட்டமும் ரத்தானால் இந்தியா அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவது சந்தேகம் தான்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News