Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய அணிக்கு ஆட்டம் காண்பித்த ஜோப்ரா ஆர்ச்சர்.!

இந்திய அணிக்கு ஆட்டம் காண்பித்த ஜோப்ரா ஆர்ச்சர்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  19 March 2021 7:45 AM GMT

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டி-20 போட்டிகள் கொண்ட தொடர் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்று டி-20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்று நான்காவது டி-20 போட்டி அதே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. முதலில் விளையாடிய இந்திய அணியில் சூரியக்குமார் யாதவ் அதிகபட்சமாக 57 ரன்கள் அடித்து அசத்தினார். இந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 185-8 ரன்கள் சேர்த்தது.


பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜெசன் ராய் 40 ரன்கள் அடிக்க பென் ஸ்டோக்ஸ் 46 ரன்கள் அடித்த நிலையில் இங்கிலாந்து அணி கடைசி ஓவர் வரை வெற்றிக்கு போராடியது. இந்திய அணியில் ஹர்டிக் பாண்டிய மற்றும் ஷர்துல் தாகூர் இருவரும் சிறப்பாக பந்து வீச இங்கிலாந்து அணி திணறியது.


கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் அதிரடியாக கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்தார் அடுத்த பத்தே சிக்ஸர் அடித்து மிரட்டினார். அடுத்த இரண்டு ஓயிட் பந்துகளை தாகூர் வீச இங்கிலாந்து அணி சற்று வெற்றியை நோக்கி நகர்ந்தது. ஐந்தாவது பந்தில் ஜோடன் அவுட் ஆக இந்திய அணி வெற்றி உறுதியானது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News