Kathir News
Begin typing your search above and press return to search.

சச்சின் தலைமையிலான இந்திய லெஜனட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.!

சச்சின் தலைமையிலான இந்திய லெஜனட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  22 March 2021 6:45 AM GMT

இந்தியாவில் நடைபெற்று வந்த ரோட்சேப்டிவேல்ட்தொடரின் இறுதி போட்டி நேற்று ராய்பூர்‌ மைதானத்தில் நடைபெற்றது. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்களை கொண்டு நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பங்களாதேஷ், இலங்கை, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டிஸ் ஆகிய அணிகள் தங்களின் முன்னாள் வீரர்கள் கொண்ட பங்கேற்றனர். இந்நிலையில் இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து விளையாடியது‌.


இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணியில் யுவராஜ் சிங் மற்றும் யூசுப் பதான் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி இந்திய அணிக்கு பெரிய இலக்கை நீர்ணயிக்க உதவினர். யுவராஜ் சிங் 60, யூசுப் பதான் 62 ரன்கள் அடிக்க இந்திய அணி 181 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய இலங்கை அணி 167 ரன்கள் மட்டுமே அடித்ததால் இந்திய 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News