Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த சாம் க்ர்ரன் மற்றும் மோயின் அலி.!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த சாம் க்ர்ரன் மற்றும் மோயின் அலி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  30 March 2021 5:15 AM GMT

ஐபிஎல் 14 வது சீசன் டி-20 தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை முடித்த நிலையில் அனைத்து வீரர்களும் ஐபிஎல் தொடருக்காக ஐபிஎல் அணியில் இணைந்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இங்கிலாந்து அணி வீரர்கள் சாம் க்ர்ரன் மற்றும் மோயின் அலி இருவரும் சென்னையில் இணைந்துள்ளனர். அதே போல் இந்திய அணியில் இடம்பெற்று இருந்த ஷர்துல் தாகூர் சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி மேற்கொண்டு வரும் மும்பை கேம்பில் இணைந்தது. ஏற்கனவே சுரேஷ் ரெய்னா மற்றும் ஜடேஜா மற்றும் பாப் டுப் ப்ளஸிஸ் போன்ற வீரர்கள் தனிமைபடுத்தலில் உள்ளனர்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் புதியதாக எடுக்கப்பட்ட இந்திய வீரர்களான புஜாரா, கிருஷ்ணாப்பா கௌதம் மற்றும் உத்தப்பா ஆகிய வீரர்கள் அணியில் இணைந்துள்ளனர்.


சென்னை அணி கடந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத நிலையில் இந்த சீசனில் கோப்பை வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. ஏற்கனவே தோனி, அம்பத்தி ராய்டு, கரன் சர்மா, திபக் சாஹர் போன்ற வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News