Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் தேர்வு.!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் தேர்வு.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  31 March 2021 5:15 AM GMT

ஐபிஎல் 14 வது சீசன் டி-20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயருக்கு தோல்ப்பட்டையில் காயம் ஏற்பட்ட நிலையில் தொடரில் இருந்து வெளியேறினார்.


அதை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் முதல் பாதி லீக் போட்டிகளில் கலந்து கொள்ளமாட்டார் என தெரிகிறது. இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டிவ் ஸ்மித் அல்லது ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்படலாம் என கூறப்பட்டது.


இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் தேர்வு செய்துள்ளது. ரிஷப் பண்ட் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் கேப்டனாக விளையாட உள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News