Kathir News
Begin typing your search above and press return to search.

ஐத்ராபாத் அணியின் மிட்செல்மார்ஷ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்.!

ஐத்ராபாத் அணியின் மிட்செல்மார்ஷ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்.!
X

Pravin KumarBy : Pravin Kumar

  |  31 March 2021 12:45 PM

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதல் போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சென்னையில் எதிர்கொள்கிறது. இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.


இதனை சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் காயம் காரணமாக கடந்த தொடர் முழுவதும் விளையாடாமல் தொடரில் இருந்து விலகிய நிலையில் இந்த சீசனிலிருந்தும் விலகி உள்ளார் மிட்செல் மார்ஷ். இந்நிலையில் அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணி வீரர் ஜெசன் ராய் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் மீண்டும் இடம்பெற்றுள்ளார் ஜெசன் ராய். ஏற்கனவே தொடர்ந்த வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பேஸ்ரோ உள்ள நிலையில் ஜெசன் ராய் மேலும் இணைந்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News