Kathir News
Begin typing your search above and press return to search.

மும்பை இன்டியன்ஸ் அணியில் இந்த சீசன் முழுவதும் வாய்ப்பு மறுக்கப்பட்ட உள்ள மூன்று வீரர்கள்.!

மும்பை இன்டியன்ஸ் அணியில் இந்த சீசன் முழுவதும் வாய்ப்பு மறுக்கப்பட்ட உள்ள மூன்று வீரர்கள்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  9 April 2021 5:45 AM GMT

14ஆவது ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசன் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு இருக்கின்றனர்.முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் மும்பையில் மோதுகிறது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிக போட்டியில் பென்சில் உட்கார வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் இவர்கள் தான் என்று பேசப்படுகிறது.


இந்நிலையில் மும்பை இன்டியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கருக்கு இந்த ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை மும்பை இன்டியன்ஸ் அணி வழங்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகின்றது. அதே போல் மும்பை இன்டியன்ஸ் அணியில் பல வருடங்களாக விளையாடி வரும் ஆதித்யா தாரேவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட வாய்ப்பு உள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். மற்றொரு வீரராக தாவல் குல்கர்னி கடந்த சீசன் முழுவதும் வாய்ப்பு மறுக்கும் பட்ட நிலையில் இந்த சீசன் முழுவதும் அவர் மும்பை இன்டியன்ஸ் அணியில் இடம் பெற வாய்ப்பு இல்லை என கூறப்படுகின்றது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News