Kathir News
Begin typing your search above and press return to search.

இங்கிலாந்துஅணிக்கு எதிரானமூன்றாவதுடி-20 போட்டியில்களம்இறங்கும் ரோஹித்!

இங்கிலாந்துஅணிக்கு எதிரானமூன்றாவதுடி-20 போட்டியில்களம்இறங்கும் ரோஹித்!

Pravin KumarBy : Pravin Kumar

  |  16 March 2021 5:00 AM GMT

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டி-20 போட்டிகள் கொண்ட தொடர் உலகின் மிக பெரிய மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டி-20 போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது டி-20 போட்டி அதே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. முதல் டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை அதிரடியான ஆட்டத்தின் மூலம் வென்ற நிலையில் இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.


இந்நிலையில் மூன்றாவது டி-20 போட்டியில் இன்று இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்ட வாய்ப்பு இல்லாத நிலையில் தொடக்க வீரர் கே எல் ராகுல் தொடர்ந்து இரண்டு டி-20 போட்டிகளிலும் தடுமாறி வரும் நிலையில் இந்த போட்டியில் அவருக்கு பதிலாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா களம் இறக்க வாய்ப்புள்ளது.ரோஹித் சர்மா முதல் இரண்டு டி-20 போட்டிகளிலும் இடம்பெறாத நிலையில் இன்று நடைபெற உள்ள மூன்றாவது டி-20 போட்டியில் களம் இறங்குவார் என ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News