20வது ஓவர் ஜடேஜா வீச இதுவே காரணம் தோனி கூறிய காரணம்.!
20வது ஓவர் ஜடேஜா வீச இதுவே காரணம் தோனி கூறிய காரணம்.!
By : Kathir Webdesk
ஐபிஎல் தொடரின் நேற்றய போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் போராடி தோற்றது. இந்த போட்டியை பொறுத்த வரையில் சென்னை அணி டாஸ் வென்ற பேட்டிங்க் செய்தது.
முதல் பேட்டிங்கில் ஷார்ஷா மைதானத்தில் 200+ ஸ்கோர் செய்தால் தான் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும் சென்னை அணி அதை நோக்கி விளையாடியது. ஆனால் தொடக்கத்திலேயே சாம் க்ர்ரன் டக் அவுட் ஆக வாட்சன் மற்றும் பாப் டுப் ப்ளஸிஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அதன் பின்னர் கடைசி ஓவரில் ஜடேஜாவும் அதிரடி காட்ட சென்னை அணி 179 ரன்கள் தான் சேர்த்தது.
இருப்பினும் இந்த ஸ்கோரை வைத்து டெல்லி அணியை சுருட்ட சென்னை அணி திட்டம் தீட்டியது ஆனால் ஷிகர் தவண் சென்னை அணிக்கு பெரிய தலைவழியை கொடுத்தார். அவர் கொடுத்த நான்கு கேட்ச்களை சென்னை அணி வீரர்கள் தவறவிட அவர் சதம் வீளாசினார். இதுவே சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்.
இந்நிலையில் அந்த இருபதாவது ஓவரை ஏன் ஜடேஜா வீசினார் என்பது குறித்து போட்டி முடிந்து டோனி பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியதாவது : இருபதாவது ஓவரை ஜடேஜா வீசுவதற்கு காரணம் யாதெனில் : பிராவோ உடல் தகுதியுடன் இல்லை அவர் போட்டியிலிருந்து பாதியில் வெளியேறினார்.ஆனால் மீண்டும் களத்திற்குள் வரவே இல்லை. அதன் காரணமாகவே ஜடேஜாவுக்கு கடைசி ஓவரை வீச வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் ஜடேஜா, கரண் சர்மா ஆகிய இருவர் மட்டுமே இருந்தனர் அதனால் நான் ஜடேஜாவை முன்னிறுத்தி பந்துவீச அனுமதித்தேன் என்று தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.