Kathir News
Begin typing your search above and press return to search.

7 பேட்மிண்டன் வீரர்களுக்கு கொரோனா உறுதி!

7 பேட்மிண்டன் வீரர்களுக்கு கொரோனா உறுதி!

ThangaveluBy : Thangavelu

  |  13 Jan 2022 9:13 AM GMT

இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் பல பிரபலங்களும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று முன்தினம் டெல்லியில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே இன்று (ஜனவரி 13) தொடரின் 2வது சுற்று தொடங்க இருந்த நிலையில், இந்திய வீரர்கள் கிடம்பி ஸ்ரீகாந்த் நம்மாழ்வார், அஸ்வினி பொன்னப்பா, ரித்திகா ராகுல், தெரசா ஜாலி, மிதுன் மஞ்சுநாத், சிம்ரன் அமன் சிங், குஷி குப்தா உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த 7 வீரர்களும் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு எதிரான போட்டியில் ஆட இருந்த வீரர்களும் அடுத்த சுற்றுக்கு தகுதி அடைந்தவர்களாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy:News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News