Kathir News
Begin typing your search above and press return to search.

அக்சர் படேலின் சுழல் பந்து வீச்சில் 112 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி!

அக்சர் படேலின் சுழல் பந்து வீச்சில் 112 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி!

அக்சர் படேலின் சுழல் பந்து வீச்சில் 112 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி!

Pravin kumarBy : Pravin kumar

  |  25 Feb 2021 10:27 AM GMT

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நேற்று அகமதாபாத் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 300 ரன்கள் அல்லது அதற்கு மேல் அடித்து சிறப்பாக போட்டியை ஆரம்பிக்கலாம் என்று நினைத்திருக்கும்.

ஆனால் அந்த அத்தனை கணக்குகளுக்கும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் முட்டுக்கட்டை போட்டு உள்ளனர். அக்சர் படேல் 6 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.இதனால் இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 48.4 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை துவங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை குவித்துள்ளது. துவக்கவீரர் ரோஹித் சர்மா 57 ரன்களையும், ரஹானே 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இதனையடுத்து இங்கிலாந்து அணியுடனான இந்த போட்டியில் மிரட்டலாக பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா போன்ற முன்னாள் வீரர்கள் பலரும் அக்‌ஷர் பட்டேலை பாராட்டி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News