Kathir News
Begin typing your search above and press return to search.

ஆசிய உலகக் கோப்பை போட்டியில் இந்திய வீரருக்கு ஏற்பட்ட காயம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்?

உலகக் கோப்பை போட்டுக்கு மத்தியில் இந்திய வீரருக்கு ஏற்பட்ட காயம், புதிய வீரரை தேர்ந்தெடுக்க முயற்சி.

ஆசிய உலகக் கோப்பை போட்டியில் இந்திய வீரருக்கு ஏற்பட்ட காயம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  27 Aug 2022 1:13 AM GMT

ஆசிய கோப்பை தொடருக்கான கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடர்காக இந்திய அணி தற்போது அங்கு சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 15 பேர் கொண்ட இந்திய அணி துபாய்க்கு சென்று பயிற்சியில் ஈடுபடுகையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நம்முடைய இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் சிறப்பாக இருந்தாலும் பவுலிங் செய்வதில் பலவீனமாக இருப்பதாக வல்லுனர்கள் கூறி வருகிறார்கள்.


இதற்கு காரணம் அனுபவமும் இல்லாத ஹர்ஷித் சிங்க் மற்றும் ஆவேஷ் கான் ஆகிய இருவரும் மெயின் பவுல்களாக களம் இறங்கியது தான். இதன் காரணமாக ஆவேஷ் காலுக்கு பதிலாக இந்திய அணியில் புதியதாக, தீபக் சாகர் கொண்டுவரபரலாம் என தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. ஆனால் எதிர்பாராத வகையில் அவருடைய காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அவரால் போட்டியில் தொடர முடியாமல் போய்விட்டது.


இதனால் அவர் மெயின் அணியுடன் சேர்க்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தேர்வு குழுவின் விளக்கம் இந்நிலையில் தீபக்சாகருக்கு ஒன்று ஆகவில்லை என்று கூறி இருந்தது. இது ஒரு பொய்யான வதந்தி செய்தி. தீபக்சாகர் இந்திய அணியுடன் தற்போது துபாயில் தான் இருக்கிறார். இதனால் யாரும் தகவல் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News