Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தானுக்கு இந்திய அணி பயணம் செய்யாது - ரோகித் சர்மா

பாகிஸ்தானுக்கு இந்திய அணி பயணம் மேற்கொள்ளாது என்று கேப்டன் ரோகித் சர்மா பதில் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு இந்திய அணி பயணம் செய்யாது - ரோகித் சர்மா

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Oct 2022 3:25 AM GMT

ஆசிய கோப்பை 2023 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறுகின்றது. இந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தான் செல்லாது என்று ஏற்கனவே இந்திய கிரிக்கெட் கவுன்சிலிங் செயலரும், ஆசிய கோப்பை கிரிக்கெட் கவுன்சிலிங் தலைவருமான ஜெய்ஷா கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த கருத்திற்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்த இருக்கிறது. நீங்கள் இங்கு வரவில்லை என்றால் நாங்கள் இந்தியாவிற்கு வருகை தந்து விளையாட மாட்டோம் என்பது போன்று அவர்கள் கூறியிருந்தார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியின் கேப்டன் கூறி இருக்கிறார்.


இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அவர்கள் இந்த ஒரு அறிக்கைக்கு பதில் மனுவை அளித்திருக்கிறார். அதாவது எங்களுடைய முழு கவனமும் அக்கறையும் தற்பொழுது உலக கோப்பையின் மீது மட்டுமே உள்ளது. ஏனென்றால் இதுதான் தற்போது எனக்கு முக்கியம். பின்னால் என்ன நடக்கப் போகிறது என்று பற்றி எனக்கு தெரிய வரவில்லை. எனவே அதை நினைத்து கவலைப்படுவது பயனில்லை என்று கூறியிருக்கிறார்.


மேலும் பாகிஸ்தான் செல்வது குறித்து இந்திய வீரர்கள் யாருக்கும் உடன்பாடு இல்லை என்றும், அவர் கூறுகிறார். இந்தியாவில் எப்படிப்பட்ட பாதுகாப்பை இந்திய வீரர்கள் பெற்றார்களோ? அதை பாதுகாப்பாக என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. வீரர்களின் பாதுகாப்பு கருவி இந்தியாவும் பாகிஸ்தான் செல்ல அனுமதிக்காது என்று நான் எதிர்பார்க்கிறேன். இது பற்றி விரைவு முடிவு விளையாட்டு துறை அமைச்சகம் எடுக்கும். அந்த முடிவை நாங்கள் அனைவரும் ஏற்போம் என்றும் அவர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News