Kathir News
Begin typing your search above and press return to search.

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி: அரையிறுதிக்கு முன்னேறினார் சிந்து!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி: அரையிறுதிக்கு முன்னேறினார் சிந்து!

ThangaveluBy : Thangavelu

  |  21 May 2022 8:55 AM GMT

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முன்னேறியுள்ளார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்னை யமகுச்சியுடன் பி.வி.சிந்து மோதினார். முதல் செட்டை 21க்கு 15 என்ற புள்ளிகள் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார்.

ஆனால், 2வது செட்டில் மீண்டு வந்த யமகுச்சி, 22க்கு 20 என்கின்ற கணக்கில் மிகப்பெரிய போராட்டத்திற்கு பின்னர் கைப்பற்றினார். இதனை தொடர்ந்து 3வது செட்டில் அதிரடியாக விளையாடிய சிந்து, 21க்கு 13 என்கின்ற கணக்கில் அதனைக் கைப்பற்றி அரையிறுதியில் நுழைந்தார்.

Source: Thanthi Tv

Image Courtesy:Telegraph India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News